-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Saturday 26 June 2010

செம்மொழி மாநாட்டில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

2010 ஐ“ன் மாதம் 23ஆம் தேதி நடக்கவிருக்கும் செம்மொழி தமிழ் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்களும் அவருடைய துணைவியாரும் சென்று உள்ளார்கள். அவர்களுக்கு இதழின் சார்பாகவும் நம் சங்கத்தின் சார்பாகவும் நல்வாழ்த்துகள்.



அவர்கள் இருவரும் பங்கேற்குவுள்ள நிகழ்ச்சி நிரல்கள்;
அன்புடையீர் !

வணக்கம்!
கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டின் போது
இணையத் தமிழ் மாநாடும் நடைபெறுகிறது.
அதில் அடியேன் பங்கேற்கும் நிகழ்ச்சி :
முரசொலி மாறன் அரங்கு வலைப்பதிவர் நிகழ்வுகள் 24-06-2010

செவிக்குணவு வழங்குவோர்
காலம் பேச்சுத் தலைப்பு
அரங்கத் தலைவர்

தலைமை:பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு 2:00-2:15 துவக்கமும் அறிமுகமும்
முனைவர் மு.இளங்கோவன்,புதுவை. 2:16-2:45 தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும்
திரு.எஸ்.பி.வி.ஆர்.சுப்பையா,கோவை. 2:45-3:15 இனியது இனியது இணையம்
திரு.அண்ணா கண்ணன்,ஆசிரியர்,வல்லமை,சென்னை. 3:15-3:45 வலைப்பூக்கள்:செய்யத் தக்கவை - தகாதவை
கவிஞர்.திரு.ஏக‌லைவ‌ன்,சேல‌ம்.3:45-4:00 வலைப்பூக்களில் மாற்றுத்திறனாளிகளின் கவிதைகள்
திரு.ம ஸ்ரீ ராமதாஸ்,சென்னை. 4:00-5:00 கட்டற்ற மென்பொருளும் தமிழ்க் கணிமையும்

அதன்பின் மறு நாள்

வலைப்பதிவர்களுக்கான நிகழ்வில் 25/06/2010ம் நாள்
பிற்பகல் 3:15 மணியிலிருந்து 3:45 மணிவரை முரசொலிமாறன்
அரங்கத்தில் கவிஞர்.திலகபாமா,சிவகாசி அவர்கள்
தலைமையில் நடைபெறும் அரங்கில் "இணைய‌ இத‌ழ்க‌ள்-ஒரு
பருந்துப் பார்வை"என்ற தலைப்பில் உரைநிகழ்த்த‌
வருமாறு திருமதி லூசியா லெபோ அவர்களை
அன்போடு அழைக்கிறோம்.

இவண்,
தி.சு.மணியம்,
செயல் இயக்குனர்,
உத்தமம்
தமிழிணையமாநாடு 2010.
இவை இரண்டையும் தங்கள் கவனத்துக்கு
மகிழ்ச்சியுடன் கொண்டுவருகிறேன் .
வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்த அன்பர்கள் அனைவருக்கும் எங்கள்
இருவரின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அனைவருக்கும் நல் வாழ்த்துகள்
நனி நன்றியன்
பெஞ்சமின் லெபோ

இத்துடன் கவிதாயினி வே.பூங்குழலி பெருமாள் அவர்களுக்கு எழுதிய வாழ்த்துப்பா
பழகும் தமிழர்க் கினியவராய்
பசுமைத் தமிழ்க்குச் சாரதியாய்
கழகம் வளரத் துணைநிற்பார்
கமழக் கமழப் பேசிடுவார்
மழைபோல் பொழியும் பேச்சாளர்!
மாண்பிற் சிறந்த பண்பாளர்!
பழுதில் தமிழில் அடுக்கடுக்காய்
பதத்தைப் பதமாய்ப் பொழிந்திடுவார்!

உலகத் தமிழ்ச்செம் மாநாட்டில்
உரையாற் றுதற்குப் பைந்தமிழ்க்கே
இளகும் கலைஞர் அழைப்பதனை
இனிதே ஏற்றுத் துணையுடனே
பலகற் றுயர்ந்த பெஞ்சமினார்!
பரவக் கண்டு பூரித்தோம்!
நிலைபெற் றுலகப் புகழ்இவர்க்கே
நேர இறையைத் தொழுகின்றோம்!

என்றும் அன்புடன்,
ஆறுமுகம்பெருமாள் பூங்குழலிபெருமாள்

1 comment:

பரிதியன்பன் said...

வாழ்த்துப் பா மிக அருமை
தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி