-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Tuesday 23 October 2007

பேராசிரியர் க. சச்சிதானந்தம், புதுவை

பேராசிரியர் அவர்கள் புதுவையில் உள்ள பிரஞ்சுக் கல்லூரியில் பணியாற்றிய பிறகு பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து வழங்கியுள்ள சிறு கதைகள் எளிய நடையில் அமைந்தவை. அனைத்து தரப்பினரும் படிக்கத் தகந்தவை. பிரஞ்சு அரசு 2006ஆம் ஆண்டு இவருடைய எழுத்துப் பணியை பாராட்டி சிறந்த பரிசான செவாலியே விருதை வழங்கி பெருமை படுத்தியுள்ளது.

எழுதிய நூல்கள்
1. கட்டுரைக் களஞ்சியம்
2. குரங்குக்காடு
3. சிவப்புப்பாறை
4. பிரஞ்சு தத்துவக்கதைகள்
5. சின்னஞ்சிறு பிரஞ்சுக் கதைகள்
6. பிரஞ்சு நகைச்சுவை 1, 2
7. ஞான மகன்
8. சுவையான பிரஞ்சுக் கதைகள்
9. சுவையான பிரஞ்சுக் கதைகள் இருபது
10. சுவையான பிரஞ்சுப் பக்கங்கள்
11. நல்ல நல்ல கதைகள்
12. பிரஞ்சு நாடோடிக் கதைகள் 1, 2
13. பிரஞ்சு நாட்டுப்புறக் கதைகள்
14. மிகமிக நல்ல கதைகள்
15. புகழ்பெற்ற பிரஞ்சுக கதைகள்
16. பிரஞ்சு இலக்கியக் கதைகள்
17. மாய ஈட்டி
18. பிரஞ்சு நன்னெறிக் கதைகள்
19. விக்தோர் உய்கோ
20. அருமைக் கதைகள் 50
21. ஏழைகள்
22. ஒரு நாள் ஒரு கதை (365 கதைகள்)
23. பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை
24. நல்லன நானூறு
25. போல், விர்ழினி (அச்சில்)

நச்சினார்க்கினிமை தரும் பேராசிரியர் சச்சிதானந்தம்
இவர் -பார்வைக்கு எளியர், தூய்மை மிக்க ஒளியர். இனிய பண்பினர்.அனைவர்க்கும் நண்பினர். அன்றும் இன்றும் என்றும் அன்றலர்ந்த தாமரை முகத்தினர். அழுக்காறில்லா அகத்தினர். இருமொழி அறிவும் தமிழ் மொழிச் செறிவும் இவர்க்கிரு விழிகள். வர்க்க பேதமும் குதர்க்க வாதமும் இவரிடம் இல்லை! பழகும் போது பெரியர் சிறியர் எனப் பிரித்துப் பாரார் -அனைவரிடமும் ஒத்த அன்புகொண்டே பழகுவார். இவரின் தந்தையார் திருமிகு சவுளி அ.சி. கணேச முதலியார். அவர்க்கு இவர் ஒரே மகன் ஆனவர். அவர் மீது பேரன்பு கொண்டவர்; இவர். 'ஒரே மகனான என்னைத் தம்மால் இயன்றவரை சிறப்பாக வளர்த்த என் தெய்வம் அவர்' என்று அவரைப் போற்றும் பண்புடையவர் பேராசிரியர் சச்சிதானந்தம.; இவர்தம் வாழ்க்கைத் துணைவியார் பெயர் திருமதி சாரதா. இவர் பெயராலேயே 'சாரதா பதிப்பகம்' ஒன்றைத் தொடங்கி அதன் வழியாகவே தம் நூல்களைப் பதிப்பித்து வருகிறார். இவர்களின் இளைய மகன் திரு அன்புவாணன் ஆவார்.
தம் தந்தையாரின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வகையில் 'நல்லன நானூறு' என்ற சிறு நூலை அச்சிட்டு அனைவருக்கும் இலவயமாகவே வழங்கிய அருளாளர் இவர். அந்நூலின் முன்னுரையில் தம் தந்தையாரைப் பற்றிப் பெருமையாகஇ"அடக்கம், அன்பு, பிறர்க்குதவுதல், பிறர் மனம் நோவாது பேசுதல், நடத்தல், பிறரிடம் எதுவும் எதிர்பாராமை, எதிலும் மன நிறைவு" ஆகியவை அவருடைய (அவர் தந்தையாரின்) நற்பண்புகள்" எனக்குறிப்பிடுகிறார். முன்னேர் எவ்வழி பின்னேர் அவ்வழி. தந்தையாரைப் போலவே தனயனும் இப்பண்புகளைப் பெற்றிருக்கிறார் என்பதை அவரிடம் நெருங்கிப் பழகும் என் போன்றோர் நன்கறிவர்.
என் இளமைப் பருவம் முதலே இவரை நன்கறிந்துள்ளேன்;. இவரும் என் தமக்கை ஒருவரும் ஒரே சமயம் ஆசிரியப் பணியில் அமர்ந்தனர். என் மூத்த தமக்கை அறச்செல்வி கர்மேலா லெபோ அவர்கள் மீது வற்றாத பற்றும் முற்றிய பாசமும் பெரு மதிப்பும் கொண்டவர் இவர். அடியேன் சிறுவனாய் இருந்த காலத்துப் பார்த்தது போலவே இன்றும் இவர் இருப்பது எனக்கு வியப்பே! சிறுவனாய் அவர் கண்ட அடியேன் வளர்ந்த பிறகு எளியேனைத் தம் தோழனாகவே ஏற்றுக் கொண்டு அன்பு பாராட்டி வருவது அவர் தம் உயரிய பண்பைக் காட்டும். எவரிடமும் எளிமையாய்ப் பழகும் இவரை அனைவரும் அன்புடன் 'சச்சி' என்றே இன்புடன் அழைப்பர்.
புதுச்சேரி அரசினர் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்றிய பின் அங்குள்ள பிரஞ்சுக் கல்லூரியில் பல்லாண்டுகள் பேராசிரியாகப் பணியாற்றிய பின்னர் இவர் பணிநிறைவு செய்தார். இவருடைய பிள்ளைகள் பிரான்சில் வசிக்கிறார்கள். ஆகவே பரி நகருக்கு அடிக்கடி இவர் வருவார். அச்சமயம் இங்கே நடைபெறும் தமிழ் விழாக்களில் இவரைக் காணலாம். கோடையிலே இளைப்பாற்றிக்கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவாய் மேடையிலே தமிழ்த் தென்றலை இவர் வீசுவார். நல்ல தமிழில் பேசுவார். இவர் பேச்சில் தமிழ்ப் பற்று ஊடுருவி நிற்கும்.
இவர் அருமை பெருமைகளைப் பலர் பேசி உள்ளனர். காட்டாக, புதுவை மண்ணின் மைந்தரான மாண்புமிகு தாவீது அன்னுசாமி (சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதியரசர்), 'பேராசிரியர் சச்சிதானந்தன் அவர்கள் பிரஞ்சிலும் தமிழிலும் நல்ல புலமை வாய்ந்தவர். பல்லாண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்ததின் விளைவாக அவர் கருத்துகளைத் தெளிவாக எடுத்துரைக்க வல்லவராகத் திகழ்கிறார்' என இவரைப் புகழ்கிறார்.
'இவர் தளரா உழைப்பினர், தாளாளர், எந்நேரமும் இலக்கியப் படைப்புப் பற்றி எண்ணிக்கொண்டிருப்பவர். செயலிலும் செய்பவர்" என இவரைப் பாராட்டிக் கூறுவார், புதுவை நன்கறிந்த முனைவர் சுந்தர சண்முகனார்.
இவர் படைப்புகளைப் புகழும் முனைவர் க.ப. அறவாணன் புதுச்சேரிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பின் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். பல நல்ல நூல்கள்pன் ஆசிரியர். இவர், பேராசிரியர் சச்சிதானந்தத்தின் நூல்களைப் பெரிதும் பாராட்டுவார். அவர் கூறுகிறார் : 'பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்கள் பிரஞ்சு மொழியிலிருந்து மொழி பெயர்த்து வழங்கியுள்ள சிறுகதைகள், எளிய முறையில் அமைந்தவை. மொழிபெயர்ப்பு என்னும் செயற்கை முட்டுப்பாடில்லாதவை. பெரியவர்களும் இளைஞர்களும் குழந்தைகளும் படிக்கத் தகுந்தவை.'
எளியேனின் நெஞ்சு நேர்ந்த நண்பர் தத்துவப் பேராசிரியர் முனைவர் க. நாரயணன், பரந்த அறிவும் ஆழந்த சிந்தனையும் கொண்டவர். தத்துவம், உளவியல் பற்றி அருமையான நூல்களைத் தமிழில் எவர்க்கும் புரியும் வண்ணம் எழுதியவர். இவரின் பல நூல்கள் தமிழக, புதுவை அரசுகளின் பரிசுகள் பலவற்றைப் பெற்றவை. இத்தத்துவ வித்தகர், பேராசிரியர் சச்சியின் புகழை இப்படி எடுத்தோதுகிறார் : "பேரா. க. சச்சிதானந்தம் அவர்களின் நூல்கள் மொழி பெயர்ப்பு என்ற எண்ணமே எழா வகையில் இயலபான மொழி நடையில் அமைந்துள்ளன. ஆசிரியரின் மொழியாக்கம் செய்யும் திறமை பாராட்டுக்குரியது".
பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்களின் தமிழ் நடை, கீற்றாய்ப் பிளந்து தரப்பட்ட கரும்பென இனிப்பதாகவும் இஃது (எளியேனின் பேராசான்) அறிஞர் மு.வ அவர்களிடம் காணப்பட்டதாகவும் பாராட்டுவார், புதுச்சேரிப் புலவரேறு அரிமதி தென்னகன்.
என்னருமைத் தோழரும் பேராசிரியராக உடன் பணியாற்றியவருமான பேரா. அ. பசுபதி (தேவமைந்தன்), "பிரஞ்சு நாட்டுக் கருவூலம் பேரா. சச்சி அவர்களின் மொழியாக்கம் என்ற ஆற்றலால், இன்று தமிழ்க்; கருவூலமாக நம் கைகளில் தவழுகின்றது" என்று சுருக்கமாக ஆனால் பொருத்தமாகச் சொல்கிறார்.
இப்படி அறிஞர்களும் பேராசிரியர்களும் பாராட்டும் பெருமை இவர்க்குண்டு. இவர்தம் சிறுவர் இலக்கியத் தொண்டினைப் பாராட்டிப் புதுவைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் பணமுடிப்பும் 'சிறுவர் மனச் செம்மல்' என்ற பட்டமும் அளித்துப் பெருமை படுத்தியது. பிரஞ்சுத் தமிழ் ஆய்வு மணி, மொழியாக்கச் செல்வர் (பாரிசில் தரப்பட்டது)...ஆகிய பட்டங்களையும் பெற்றவர். பிரான்சின் மிக உயரிய விருதான 'செவாலியே' விருது இவருக்கு அண்மையில் வழங்கப் பட்டது.
பேரா. சச்சிதானந்தம், பெத்திசெமினேர் பள்ளியில் படித்தவர். 1951 ஆம் ஆண்டு தமிழ் பிரவே தேர்வுக்குச் சென்றவரும் தேர்வு பெற்றவரும் இவர் ஒருவர்தாம். இதனை, இ;வர் 'பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை' என்ற அருமையான ஆய்வு நூல் பக்கம் 44 -இல் பதிவு செய்துள்ளார். பிரஞ்சு தமிழ் என இரு மொழிகளையும் கசடறக் கற்ற இவர் 1952 ஆம் ஆண்டில் திரு நடராசன் என்னும் ஆசிரியருடன் சேர்ந்து, 'வடிவ கணித வழிகாட்டி' என்ற நூலைப் படைத்திருக்கிறார் (காண்க : 'பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை' பக்கம் 46). ஆகவே ஆசிரியராகப் பணி அமர்ந்த சமயத்தில் இவர் கணக்குப் பாடமே நடத்தி இருக்க வேண்டும் எனக் கொள்வதில் தவறில்லை.
இவர் படைத்த நூல்களின் பட்டியல் :1. கட்டுரைக் களஞ்சியம்2. குரங்குக்காடு3. சிவப்புப்பாறை4. பிரஞ்சு தத்துவக்கதைகள்5. சின்னஞ்சிறு பிரஞ்சுக் கதைகள்6. பிரஞ்சு நகைச்சுவை 1, 27. ஞான மகன்8. சுவையான பிரஞ்சுக் கதைகள்9. சுவையான பிரஞ்சுக் கதைகள் இருபது10. சுவையான பிரஞ்சுப் பக்கங்கள்11. நல்ல நல்ல கதைகள்12. பிரஞ்சு நாடோடிக் கதைகள் 1, 213. பிரஞ்சு நாட்டுப்புறக் கதைகள்14. மிகமிக நல்ல கதைகள்15. புகழ்பெற்ற பிரஞ்சுக கதைகள்16. பிரஞ்சு இலக்கியக் கதைகள்17. மாய ஈட்டி18. பிரஞ்சு நன்னெறிக் கதைகள்19. விக்தோர் உய்கோ20. அருமைக் கதைகள் 5021. ஏழைகள்22. ஒரு நாள் ஒரு கதை (365 கதைகள்)23. பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை24. நல்லன நானூறு25. போல், விர்ழினி 26 "பெர்ரோ" கதைகள்
இவை அன்றிப் பிறருடன் சேர்ந்து, வடிவ கணித வழிகாட்டி, ஊழவெநள நவ டுநபநனெநள னந ட'ஐனெந போன்ற நூலகளையும் இவர் படைத்தள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நூல்களில் பெரும்பாலானவை பிரஞ்சுக்கதைகளின் மொழி பெயர்ப்பே! இதனை மேலே உள்ள இவர் படைப்புகளின் பட்டியல் அறிவிக்கும். இவை யாவற்றிலும் சேர்த்து இவர் மொழி பெயர்;த்துத் தந்த நூலகளின் எண்ணிக்கை ஐந்நூறாகும். (காண்க : 'புகழ் பெற்ற பிரஞ்சுக் கதைகள்' - என்னுரை). இந்த நூலில் பதினோரு கதைகள் உள்ளன. பொருளடக்கத்தில் அக்கதைகளின் பெயர்களையும் அவற்றின் இயற்றியவர்களின் பெயர்களையும் தமிழ், பிரஞ்சு என இரு மொழிகளில் தந்திருக்கிறார். புpரஞ்சு எழுத்தாளர்களில் அதிகப் புகழ் பெற்ற கீ தெ மோபசா(ன்) (புரல னந ஆயரியளளயவெ) படைப்புகளில் இருந்து நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பிடத் தக்க இன்னொரு பிரஞ்சு எழுத்தாளர், அல்போன்சு தொதெ (யுடிhழளெந னுயுருனுநுவு). இவருடைய கதைகள் ஐந்து இதில் உள்ளன. ஏனைய இரண்டில் ஒன்று புரோஸ்பர் மெரிமே (Pசழளிநச ஆநுசுஐஆநுநு) எழுதிய "நீதி' ஆகும். மற்றதை எழுதியவர் அரிஸ்தித் ஃபாபர் (யுசளைவனைந குயுடீசுநு). 'பிரஞ்சு இலக்கியக் கதைகள்' (ஊழவெநள னர ஆழலநn யுபந) என்ற நூலில்,கதைகளின் பெயர்கள் மட்டுமே பிரஞ்சிலும் இடம் பெறுகின்றன. இவற்றைத் தவிர ஏனைய கதை நூல்களில் ஆசிரியர் நூலகளின் பெயர்கள் பிரஞ்சில் குறிப்பிடப்படவில்லை என்றே தோன்றுகிறது. (ஐயாவின்; நூல்களில் ஒரு சிலவே தற்போது அடியேன் வசம் உள்ளன. ஆகவே இது பற்றி உறுதியாகவோ அறுதியாகவோ கூற இயலவில்லை!).
இக்கதை நூல்களில் குறிப்பிடத்தக்க நூல் ஒன்று உண்டு. அதுதான் 'ஒரு நாள் ஒரு கதை'. 365 நாள்களுக்கும் நாளுக்கொரு கதை இஃதில் உண்டு. இவை அனைத்தும் பிரஞ்ச மொழியிலிருந்து பெயர்க்கப் பட்டவையே. ஆனால், பெரும்பாலானவை பிரஞ்சுக் கதைகளாக இருந்தாலும்இ ஏனையவற்றின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், ஜெர்மன், சீனா, ஜப்பான், உருசியா, வியத்நாம், இந்தோனேசியா... ஆகும்.
இதன் முன்னுரையில் ஆசிரியர்,"கதைகள் சிலவற்றில் தமிழ் நாட்டுக் கதைகளின் சாயல் தெரியும். ஆனால் அவற்றில் வேறுபாடுகள் இருக்கும். இதில் உள்ள கதைகள் பல்வேறு வகையின. நீதி வரலாறு, அறிவுரை தத்துவம், பொழுதுபோக்கு, நகைச் சுவை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டவை..." என்று கூறுவது முற்றிலும் உண்மையே! எந்தக் கதை எந்த நாட்டினுடையது என்ற குறிப்பு இல்லாமை வருந்தத் தக்கதே! அக்டோபர் 1 ஆம் (274 -ஆம்) நாள், கதைத் தலைப்பு 'தன் வினை தன்னைச் சுடும்' நகைச் சுவை மிக்கது. படிக்கச் சுவையானது. (பக்கம் 257).
ஐயா இப்படிப் பிரஞ்சு மொழிக் கதைகளை மொழிபெயர்த்து வழங்கியமைக்கு மகாகவி பாரதியும் காரண கர்த்தா ஆவார்.
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல். வேண்டும்"
எனப்பாடித் தூண்டியவர் அவர்தாமே! ஆனாலும், தம் ஆக்கங்களுக்கு மறைமுகமாக அவர் தரும் காரணங்கள் : "படிக்கத் தெரிந்த பிள்ளைகளிடம் கதை நூல்களைக் கொடுத்துப் படிக்கச் செய்ய வேண்டும். கதைகள் படிப்பதால் வாசிக்கும் பழக்கம் வரும். எடுத்த நூலைப் பிழையின்றிப் படிக்கலாம். கட்டுரைகளைப் பிழையின்றி எழுதலாம். எழுத்துப் பிழைகளும் சொற்றொடர்ப் பிழைகளும் குறையும், சொல்வளம் பெருகும். பிள்ளைகளுக்குப் படிக்கம் வழக்கம் வளர, கதைகள் வழிகாட்டும். படிக்கும் பழக்கம் அனைவருக்கும் அவசியமானது".
அதனால்தான், நீதியரசர் மாண்புமி;கு கற்பக விநாயகம் அவர்கள், "படிக்கும் பழக்கம் இல்லாதவன் நீரற்ற மேகம், பாலற்ற பசு, பழமற்ற மரம். எனவே நிறையப் படிக்க வேண்டும்' என்கிறார். இதற்காகவே பலப் பல கதை நூல்களைப் படைத்த பேராசிரியர் சச்சிதானந்தம் நம் பாராட்டுக்கும் சீராட்டுக்கும் உரியவர்.
அண்மையில் தாயகம் சென்றிருந்தேன். நண்பர் 'சச்சிக்கு' நண்பர்கள் வழியாகத் தூது விடுத்தேன், சந்திக்க ஆவல் என்று. குறிப்பிட்ட நாளன்று நண்பர்கள் கூடினோம். ஆனால் உடல்நலக் குறைவால் சச்சி கலந்துகொள்ள முடியாமல் போனது. பிரான்சுக்குப் புறப்படும் நாளுக்கு முந்திய நாள், என்னருமை நண்பர்கள் - முனைவர் தத்துவப் பேராசிரியர் க. நாராயணன், நன்னெறிப் பதிப்பக உரிமையாளரும் சிறுவர்கள் கதைகள் பதிப்புக்கு வித்திட்டவரும் தாகூர் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை முன்னாள் தலைவருமான பேரா. எ. சோதி - என்னை அகத்தியம் சந்திக்க விரும்பினர். புதுவையில் ராம் இன்டர்நேஷனல் ஓட்டலில் சந்தித்தோம். என்ன வியப்பு, உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் எளியேனைச் சந்திக்க வந்துவிட்டார் சச்சி.
இதுதான் பேராசிரியர் சச்சிதானந்தம்!
பி.கு : அவரின் சிறந்த நூலான 'பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை" பற்றிய எளியேனின் கண்ணோட்டம் விரைவில் வரும்.
- பெஞ்சமின் லெபோ

Wednesday 17 October 2007

கடிதம்

அன்பார்ந்த நண்பர் பெஞ்சமின் அவர்களுக்கு, வணக்கம்.முதலில், நான் திண்ணை ஆசிரியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகல்:
பாரிசில் பாரதி-125 விழா
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டதை அழகிய சொற்சித்திரமாக்கியுள்ளார் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ.அந்த விழாக் கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெறுவதற்கு, நம் திண்ணை.காம்-இல் இவ்வாண்டு ஏப்ரல் 19 அன்று வெளிவந்த - "ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்? - ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி" என்னும் என்கட்டுரையைஜ"நன்றி: திண்ணை.காம்" குறிப்பிட்டு, நண்பர் நாகி மூலம் அனுப்பிவிட்டு, விழாவில் பங்கேற்க இயலாதிருந்த எனக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் உயிரோட்டமுள்ள இந்தச் சித்திரமும் தெளிவான படங்களும்மகிழ்ச்சியைத் தருவன.கட்டுரையைத் தக்க தருணத்தில் வெளியிட்ட தங்களுக்கு என் பாராட்டுகள். அன்புடன்
தேவமைந்தன்
பாரதி விழா மலரும் பாவாணர் நூற்.விழா மலரும் கிடைத்தன பாவாணர் நூற்.விழாச் சிறப்பு மலர்களிலேயே பெரியதும் சிறப்பானதும் மலேசியாவில்பேராக் - பாரிட் புந்தாரில் வெளியான மலேசிய மலர்தான்.
பாரதி-125 விழா மலரில் உங்கள் கட்டுரை மட்டுமே எடுகோளை(hypothesis)முடிபு நோக்கி நகர்த்தி ஆய்ந்துரைக்கும் அறிவுத்திறன் கொண்டுள்ளதாக விளங்குகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து இணையவுலகுடன்நெடுங்காலமாகத் தொடர்புகொண்டுவரும் ஹரியின் 'மன்ற மையப் பதி'வைச் சான்று காட்டியிருப்பதும் சிறப்பு.(புதுச்சேரி.காம்-(pudhucherry.comஇல்வலையாசான் தியாகுஇ 'ஹரிமொழி' என்ற பகுதியையே தனியாக வைத்துள்ளார்..)
நம் புதுச்சேரி மண் பற்றிச் சொல்லியிருப்பதும் உண்மையே. அரவிந்தர்இங்கேயே ஆசிரமம் நிறுவியதுபோல் பாரதி இங்கேயே இருந்திருந்தால் அவர் நீடித்திருப்பார் என்றொரு நம்பிக்கையும் 'தமிழணங்கு' ஆசிரியர்வேலாயுதனார் முதலானோரிடையே நிலவியது. பாரதியைப் புதுவையிலிருந்து மீண்டும் தமிழகத்துக்கு நகர்த்திய மனிதசக்தி எது? நெடும்பாடல்கள் மூன்றைஅவர் தருமாறு செய்த புதுச்சேரி அவருக்குச் சலிப்பானதுமேன்?('பாரதியார் கவிதைகள்' - வானவில் பிரசுரத்தில் இக்கருத்தைக் கண்டேன்.)
பாரதியின் தலையசைப்பின் நோக்கத்தை நன்றாக ஆராய்ந்திருக்கிறீர்கள். மனோன்மணியம் சுந்தரனார் மொழிந்ததையும் சரியான முறையில்கொடுத்துள்ளீர்கள்.
"ஆணாதிக்கம் குறைந்துவரும் இந்தக் காலகட்டத்தில் கூட, பெண்ணுக்குஇழைக்கப்படும் அநீதிகள் குறையவில்லையே! " "..பாஞ்சாலி சபதம் பாரதப் பெண்ணின் சபதம் முடிவடையவே முடிவடையாது" ..பிறகு முடிபுரைக்கும்கடைசிப்பத்தி - அருமை. எனக்கு இப்படியொரு 'கான்செப்ட்' உதிக்கவில்லையே என்று மகிழ்ந்து உங்களைப் பாராட்டுகின்றேன்.
இக்கட்டுரையை, இறுதியில் 'நன்றி: மகாகவி பாரதியாரின் 125ஆம் ஆண்டுவிழா மலர், முத்தமிழ்ச் சங்கம், பிரான்சு' என்று குறித்துத் திண்ணைஆசிரியருக்கு நீங்கள் இணைப்பில்(attachment) அனுப்பலாமே? அவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன் தங்கள்,
தேவமைந்தன்
பின்குறிப்பு:கம்பன் விழா அழைப்பிதழிலும் பாரதிவிழா மலரின் கடைசிப் பக்கத்திலும்இடம்பெற்றுள்ள Joute Oratoire என்பது Debat litteraire என்றுதான் பிரஞ்சுமொழி மரபுப்படி இருக்கவேண்டும் என்று நா.கி. அவர்களிடம் தான் சொன்னதாக, நண்பர் -காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின்பிரெஞ்சுப் பேராசிரியர் டாக்டர் சு.ஆ.வெங்கடேச நாயக்கர் தெரிவித்தார்.துழரவந ழுசயவழசைந என்பது தமிழில் உள்ள சொற்போரை(சொல்-மற்போர் என்றார்) பிரஞ்சில் சொல்லுவதாக உள்ளதாம். தாங்கள் விழைந்தால் இதுதொடர்பாக, அவர் மின்னஞ்சல் முகவரி: vengadasn2002@yahoo.fr

--தேவமைந்தன்(அ.பசுபதி)
A.Pasupathy(Devamaindhan)

Sunday 7 October 2007

பாரதி விழா இனிதே நடந்தது
















பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
செப்டம்பர் 22 ஆம் நாள் பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 -ஆம் ஆண்டு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு தலைமை தாங்கி நடத்தித் தருவதற்காகவே பாரிஸ் வந்திருந்தார் புகழ்பெற்ற எழுத்தாளரும் சாகித்திய அகாதமி பரிசு பெற்றவருமான பிரபஞ்சன். பாரிசில் உள்ள பல்கலைக்கழக நகரின் இந்திய மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவை முத்தமிழ்ச் சங்கம்இ தமிழ்வாணி என்ற தாளிகை முதலியவற்றை நடத்தி வரும் திரு கோவிந்தசாமி செயராமன் (அடியார்க்கன்பன்) முன்னின்று முயற்சி செய்து சிறப்பாக நடத்தினார். பிரான்சுக் கம்பன் இதழ்இ மோ நகர் பூக்கள் கழகம்இ திரான்சி நகர் தமிழர் இல்லம்இ திராப்பு நகரைச் சாhந்த தமிழ்ச் சங்கம்இ லியோன் நகரைச் சேர்ந்த திரு சம்பத் எதுவார்இ தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்ற நாவலாசிரியர் திரு நாகரத்தின கிருஷ்ணாஇ ஷெவி லா ரூய் நகரப் பிரஞ்சு இந்தியக் கலாச்சாரக் கழகம்இ லா கூர்நெவ் நகரச் சிவன் கோயில்இ பாரீசுத் தமிழ்ச் சங்கம்இ ஓர்லி நகர் தமிழியக்கன் திரு தேவகுமாரன்இ மகேசு ஆர்ட்ஸ் ஓவியர் அண்ணாதுரைஇ செர்ழி போந்துவாஸ் நகரின் பிரஞ்சு இந்தியத் தமிழ்ச் சங்கம்இ செர்ழி கலைவல்லுநர் திரு சீனு கணேஷ்இ திரு சிவாஇ பேராசிரியர் பெஞ்சமின் லெபோ... முதலியோர் இவருக்குத் துணை நின்றனர்.
குத்து விளக்குகளுக்குத் தாய்க்குலங்கள் ஒளி ஊட்டத் தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியதுஇ பரதக் கலை ஆசிரியை திருமதி சேஷா கற்பகம் அவர்களுடைய அருமையான பரத நாட்டியம் நிறைவு பெற்றபின் முத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு கோவிந்தசாமி செயராமன் (அடியார்க்கன்பன்) அனைவரையும் வரவேற்றார். நகையும் சுவையுமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பேராசிரியர் பெஞ்சமின் லெபோஅழைப்பு விடுக்க புதுவைக்குப் புகழ் சேர்த்து வரும் நாவலாசிரியர் பிரபஞ்சன் தலைமை ஏற்று விழாவைத் தொடங்கி வைத்தார். புதுச்சேரி லிசேவில் பல்லாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற செவாலியே சச்சிதானந்தன்இ தமிழியக்கன் திரு தேவகுமரன் இருவரும் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் கி; பாரதிதாசன்இ 'பாரதி; இன்று வந்தால்' என்ற தலைப்பில் தம் உள்ளத்திலிருந்து சில செய்திகளைக் கவிதையாக்கிப் படைத்தார். இமய மலையைப் பாரதியின் தலைப்பாகையாக உருவகப்படுத்திக் கவிதை படை(டி)த்ததை அனைவரும் நன்கு ரசித்தனர். புதுச்சேரிப் புலவர் வாணிதாசனாரின் மருமகனும் பல்லாண்டுகள் ஆசிரியப் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவருமான திரு வ.கலியபெருமாள் பாரதியார்இ பாரதிதாசனார்இ வாணிதாசனார் என்ற முப்பெருங்கவிஞர்களை ஒப்பிட்டுத் தம் கருத்துகளை வெளியிட்டுப் பேசினார். திரு நாகரத்தின கிருஷ்ணாஇ 'பாரதியின் பெண்ணியல்' பற்றி உரையாற்றினார். பிரபஞ்சன் தம் தலைமை உரையில் பாரதியின் ஆளுமையை உணாத்திப் பல கோணங்கள்pல் அருமையாகப் பேசியதை மக்கள் ஆடாமல் அசையாமல் ரசித்தனர்.
பகலுணவுக்குப் பின் சபை மீண்டும் கூடியது. இந்த விழாவுக்கென அச்சிடப்பட்ட விழா மலரைப் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தமக்கே உரித்தான அடுக்கு மொழியில் மிடுக்காக அறிமுகப் படுத்திப் பேசஇ மலரைத் திரு பிரபஞ்சன் வெளியிட்டார். சிறப்பாக அழைக்கப் பட்டவர்கள் மேடையில் மலரைத் திரு பிரபஞ்சன் கரங்களில் இருந்து பெற்றுக்கொண்டனர். மற்றவர்களுக்கு மலர்கள் சபையில் வழங்கப்பட்டன. மலரின் அட்டைப் படத்தை அழகான முறையில் வடிவமைத்த திரு சிவாவுக்குக் பாராட்டுகள் வழங்கப் பட்டன. பின்னர் பாரதியாரின் கவிதைகள் அடங்கிய கையடக்க ஏடுகளை இலவசமாகவே முத்தமிழ்ச் சங்கம் வழங்கியது. பின்னர்இ ஈழக் கவிதாயினி திருமதி லினோதினி ஷண்முகநாதன் பாரதி பற்றிய தம் கண்ணோட்டத்தைக் கவிதையில் தந்தார். தொடர்ந்து காரை. இளையபெருமாள் என்ற இசைக்கலைஞர் - இவரும் பாரதி விழாவுக்காகவே கடலூரிலிருந்து பாரீஸ் வந்தவர் - இனிய குரலெடுத்துப் பாரதியார்இ பாரதிதாசன்இ உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ... பாடல்களை உணர்ச்சியோடு பாட மக்கள் பெரிதும் சுவைத்து மகிழ்ந்தனர். திரு பிரபஞ்சன்இ முத்தமிழ்ச்; சங்கம் வழங்கிய பாராட்டுப் பட்டயங்களைக் கவிஞர் கி. பாரதிதாசனுக்கும் இசைக் கலைஞர் காரை. இளையபெருமாளுக்கும் வழங்கிப் பொன்னாடை போர்த்திப் பதக்கம் அணிவித்துப் பெருமை படுத்தினார். ஏனைய பேச்சாளர்கள்இ கவிதாயினி ... முதலியோர்க்கும் அவர் பொன்னாடை போர்த்திப் பதக்கம் அணிவிக்க அனைவரும கைதட்டி மகிழ்ந்தார்கள். பாரிசில் உள்ள இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகத்தின் சார்பாகச் செவாலியே சிமோன் யூபர்ட் திரு பிரபஞ்சன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தினார். முத்தமிழ்ச் சங்கம்இ பாரதி விழாக்குழு சார்பாகத் திரு பிரபஞ்சன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டுப் பதக்கம் வழங்கப் பட்டது. பின் திரு பிரபஞ்சன் அவர்கள் தம் இறுதி உரையை நிகழ்த்தினார். சிறுகதைஇ கதைஇ இக்கால இலக்கியம் மேல் நாட்டு இலக்கியம் எனப் பலவற்றை;க குறித்து விரிவாகஇ சிறப்பாகப் பேசிய அவர் விழுமியங்களை (வேல்யூஸ் - எயடரநள) வலியுறுததிப் பேசினார்.
இறுதி நிகழ்ச்சியாகஇ மகாகவி பாரதியின் கனவுகள் : மெய்யாகி ஒளிர்கின்றன? பொய்யாகி மறைகின்றன? என்ற தலைப்பில் பட்டிமன்றம் தொடங்கியது. மெய்யாகி ஒளிர்கின்றன என்ற அணியில் திரு நாகரத்தின கிருஷ்ணாஇ திருமதி ராசி சிமோன் சிறப்பாக வாதிட்டனர். பொய்யாகி மறைகின்றன என்று மிகச் சிறப்பாக வாதிட்டவர்கள் திரு யோகானந்த அடிகள்இ திரு மோரோ நடராசன். சுதந்திரம் பெறுதல் என்ற கனவைத் தவிரஇ பாரதியின் ஏனைய கனவுகள் - சாதிஇ மத பேதமில்லா சமூகம்இ பெண்ணடிமைஇ இந்திய ஒற்றமை...- பொய்யாகி மறைகின்றன என்று சுருக்கமாகச் சுட்டிக்காட்டினார் நடுவர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ. தம் கருத்துக்கு பாரதியாரின் பேத்தி விஜய பாரதி அவர்களின் கூற்றை எடுத்துக் காட்டி மகாகவியின் கனவுகள் பொய்யாகி மறைகின்றன எனத் தீர்ப்பு சொல்லி மகாகவியின் கனவுகளை மெய்யாக்க நாம் முயலவேண்டும் என்ற வேண்டுகோளுடன் பட்டி மன்றத்தை முடித்துவைத்தார். முத்தமிழ்சங்கத்தின் நன்றி உரையுடன் விழா இனிதே நடந்து முடிந்தது.
இந்த விழாவுக்காகத் தம் உடல் நலத்தையும் பாராமல் தன்னலம் இல்லாமலஇ திரு கோவிந்தசாமி செயராமன் (அடியார்க்கன்பன்)இ திரு சிவாஇ திரு கௌதமன் (பிரபஞ்சன் அவர்களின் மகனார்)... உட்படப்; பலரும் உழைத்தனர். அவர்கள் அத்தனை பேரும் மகாகவிக்கு உண்மையான அஞ்சலி செய்கிறவர்கள் ஆகிறார்கள். அவர்களைப் பாராட்டுவோம்.



- தகவல் : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ