-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Wednesday 27 May 2009

LYONல் புல்லாங்குழுலிசை

லியோனில் பிரஞ்சுமொழியில் இசைபற்றிய விளக்கத்துடன் குழலிசை விருந்து!
வழங்கியவர் முத்தமிழ்ச்செல்வர் இயலிசைப்புலவர் இராச.வேங்கடேசனார் புதுவை.
பிரஞசு மக்கள் அவையில் குழலிசையில் அகமகிழ்ந்து கரவொலி எழுப்பிப்பாராட்டினர்.!





Wednesday 20 May 2009

முத்தமிழ்ச் சங்கம் - தமிழ்வாணி இணையதளம் 10 ஆண்டு விழா







மே மாதம் 9-ஆம் நாள் (திருவள்ளுவர் ஆண்டு 2040 மேழம்; 26) சனிக்கிழமை அன்று முத்தமிழ்ச்சங்கம்-தமிழ்வாணியின் 10ஆம் ஆண்டின் மாபெரும் இலக்கிய விழா, சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இயல் இசை நாடகம் முத்தமிழ:; என முத:தமிழும் முழுமையாக முகிழ்த்தன.

விழா நடைபெற்ற இடம் :
சால் தெ லொத்தல் தெ வீல், லெ புர்ழே
(Salle de l'Hôtel de Ville, Le Bourget)

விழாவினை ரசிக்கத் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் வந்திருந்தனர். தம் இன்னிசையோடு குழலிசையும் கவியுரையும் வழங்கியவர் இயலிசைப்புலவர் கலைமாமணி இராச.வேங்கடேசனாh அவர்கள். முத்தமிழ்ச்சங்கத்தின் அழைப்பை ஏற்றுச் சிறப்பு விருந்தினராகப் புதுவையிலிருந்து இவர்வந்திருந்தார்.
அண்ணாதுரை இணையர் மங்கல விளக்குகள் ஏற்றினர். 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற பாவேந்தரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அமிழ்தாக வழங்கினர் திருமதி சரோஜாதேவராசு, திருமதி பூங்குழலிபெருமாள்.
வந்திருந்தோரை வருக வருக எனச் சங்கத்தின் நிறுவனர் ரூ தலைவர் திரு.கோவிந்தசாமி செயராமன், வரவேற்றதோடு தமக்கு உறு துணையாக இருந்தவர்களுக்கு நன்றியும் நவின்றார். அவரோடு இணைந்து பிரஞ்சு மொழியில் தம் வரவேற்புரையை வழங்கினார் திருமதி திக்.ஆச்சி.
விழாவில்திருமதி டாக்டர் இராச. இராசேசுவரி பரிசோ மாணவி. செல்வி எதுவார் மினர்வாவின் நாட்டியமும் இராசேசுவரியின் கணீர்க்குரலில் ஒலித்த இசையும் சிறப்பாக இருந்தன.
தொடர்ந்து கலைமாமணி இராச.வேங்கடேசனார் எழுதிய இருமொழிக்கவிதை நாடக நூல் வெளியிடப்பட்டது. நூலின் பிரதியை நகரத் தந்தை வெளியிடத் தமிழறிஞர்களும் தமிழன்பர்களும் நூலைப் பெற்றுக்கொண்டனர். நூல் வெளியீட்டு வழாவிற்குப் பின்னர் கலைமாமணி இராச.வேங்கடேசனார்க்கு "முத்தமிழ்ச்செல்வர்' என்ற விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, மிகச்சிறந்த பிரஞ்சு - தமழ் அகராதியைப் படைத்து, அச்சிட்டு வெளியிட்ட திருமிகு நாகராசன், எம்.ஏ அவர்களுக்கு பாராட்டுப் பட்டயம் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் இயலிசைப்புலவர் இராச வேங்கடேசனார் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கி முத்தமிழ் முத்துக்களை அள்ளி வழங்கினார்.. தொடர்ந்து முத்தமிழில் பெண்ணியல், இசையியல், நட்பியல், அரசியல், துறவியல், உளவியல், வாழ்வியல் என்ற தலைப்புகளில் கவிஞர் கி.பாரதிதாசன், கவிதாயினி லினோதினி சண்முகநாதன், கவிஞர் மொரோ நடராசன், கவிதாயினி சரோஜாதேவராசு, புலவர்.பொன்னரசு, கவிஞர் பாரீசு பார்த்தசாரதி, கவிதாயினி பூங்குழலிபெருமாள் ஆகியோர் செவி இனிக்கக் கவியுரை வழங்கினர்.

மதிய உணவிற்குப் பின்னர் மோ பூக்கள் கழகத்தின் சிறுவர்கள் சிறப்பான முறையில வழங்கி;ய இராமாயண நாட்டிய நடனம் அனைவர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டது

கவிச்சித்தர் கண. கபிலனார் எழுதிய முப்பாலும் அப்பாலும் என்ற நூலும், சங்கத்தின் பத்தாம் ஆண்டுச் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டன. விழாவில் புலவர் வ.கலியபெருமாளுக்கும் புதுவை செல்வம் ஆதவனுக்கும் முத்தமிழ்ச்சங்கம் பட்டயம் வழங்கிச் சிறப்பித்தது.

தொடர்ந்து, கலைமாமணி இராச.வேங்கடேசனார் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் புதுவை ஆதவனின் தொடக்கவுரையும், புலவர் வ.கலியபெருமாள், திரு.யோகானந்த அடிகளார், திருமிகு அலன் ஆனந்தன் ஆகியோர் வழங்கிய சிறப்புரைகளும் சிறப்பாக அமைந்தன. விழா நிறைவில் சங்கத்தின் தலைவர் நன்றியுரை நவின்றார். சங்கத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் புலவர் பொன்னரசும், திருமதி பூங்குழலி பெருமாளும் தொகுத்து வழங்கினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் சங்கத்தின் தலைவர் கோவிந்தசாமி செயராமன் சிறப்பாகச் செய்திருந்தார்.

வருணனை : திருமதி பூங்குழலி பெருமாள்