-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Tuesday 23 October 2007

பேராசிரியர் க. சச்சிதானந்தம், புதுவை

பேராசிரியர் அவர்கள் புதுவையில் உள்ள பிரஞ்சுக் கல்லூரியில் பணியாற்றிய பிறகு பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து வழங்கியுள்ள சிறு கதைகள் எளிய நடையில் அமைந்தவை. அனைத்து தரப்பினரும் படிக்கத் தகந்தவை. பிரஞ்சு அரசு 2006ஆம் ஆண்டு இவருடைய எழுத்துப் பணியை பாராட்டி சிறந்த பரிசான செவாலியே விருதை வழங்கி பெருமை படுத்தியுள்ளது.

எழுதிய நூல்கள்
1. கட்டுரைக் களஞ்சியம்
2. குரங்குக்காடு
3. சிவப்புப்பாறை
4. பிரஞ்சு தத்துவக்கதைகள்
5. சின்னஞ்சிறு பிரஞ்சுக் கதைகள்
6. பிரஞ்சு நகைச்சுவை 1, 2
7. ஞான மகன்
8. சுவையான பிரஞ்சுக் கதைகள்
9. சுவையான பிரஞ்சுக் கதைகள் இருபது
10. சுவையான பிரஞ்சுப் பக்கங்கள்
11. நல்ல நல்ல கதைகள்
12. பிரஞ்சு நாடோடிக் கதைகள் 1, 2
13. பிரஞ்சு நாட்டுப்புறக் கதைகள்
14. மிகமிக நல்ல கதைகள்
15. புகழ்பெற்ற பிரஞ்சுக கதைகள்
16. பிரஞ்சு இலக்கியக் கதைகள்
17. மாய ஈட்டி
18. பிரஞ்சு நன்னெறிக் கதைகள்
19. விக்தோர் உய்கோ
20. அருமைக் கதைகள் 50
21. ஏழைகள்
22. ஒரு நாள் ஒரு கதை (365 கதைகள்)
23. பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை
24. நல்லன நானூறு
25. போல், விர்ழினி (அச்சில்)

நச்சினார்க்கினிமை தரும் பேராசிரியர் சச்சிதானந்தம்
இவர் -பார்வைக்கு எளியர், தூய்மை மிக்க ஒளியர். இனிய பண்பினர்.அனைவர்க்கும் நண்பினர். அன்றும் இன்றும் என்றும் அன்றலர்ந்த தாமரை முகத்தினர். அழுக்காறில்லா அகத்தினர். இருமொழி அறிவும் தமிழ் மொழிச் செறிவும் இவர்க்கிரு விழிகள். வர்க்க பேதமும் குதர்க்க வாதமும் இவரிடம் இல்லை! பழகும் போது பெரியர் சிறியர் எனப் பிரித்துப் பாரார் -அனைவரிடமும் ஒத்த அன்புகொண்டே பழகுவார். இவரின் தந்தையார் திருமிகு சவுளி அ.சி. கணேச முதலியார். அவர்க்கு இவர் ஒரே மகன் ஆனவர். அவர் மீது பேரன்பு கொண்டவர்; இவர். 'ஒரே மகனான என்னைத் தம்மால் இயன்றவரை சிறப்பாக வளர்த்த என் தெய்வம் அவர்' என்று அவரைப் போற்றும் பண்புடையவர் பேராசிரியர் சச்சிதானந்தம.; இவர்தம் வாழ்க்கைத் துணைவியார் பெயர் திருமதி சாரதா. இவர் பெயராலேயே 'சாரதா பதிப்பகம்' ஒன்றைத் தொடங்கி அதன் வழியாகவே தம் நூல்களைப் பதிப்பித்து வருகிறார். இவர்களின் இளைய மகன் திரு அன்புவாணன் ஆவார்.
தம் தந்தையாரின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வகையில் 'நல்லன நானூறு' என்ற சிறு நூலை அச்சிட்டு அனைவருக்கும் இலவயமாகவே வழங்கிய அருளாளர் இவர். அந்நூலின் முன்னுரையில் தம் தந்தையாரைப் பற்றிப் பெருமையாகஇ"அடக்கம், அன்பு, பிறர்க்குதவுதல், பிறர் மனம் நோவாது பேசுதல், நடத்தல், பிறரிடம் எதுவும் எதிர்பாராமை, எதிலும் மன நிறைவு" ஆகியவை அவருடைய (அவர் தந்தையாரின்) நற்பண்புகள்" எனக்குறிப்பிடுகிறார். முன்னேர் எவ்வழி பின்னேர் அவ்வழி. தந்தையாரைப் போலவே தனயனும் இப்பண்புகளைப் பெற்றிருக்கிறார் என்பதை அவரிடம் நெருங்கிப் பழகும் என் போன்றோர் நன்கறிவர்.
என் இளமைப் பருவம் முதலே இவரை நன்கறிந்துள்ளேன்;. இவரும் என் தமக்கை ஒருவரும் ஒரே சமயம் ஆசிரியப் பணியில் அமர்ந்தனர். என் மூத்த தமக்கை அறச்செல்வி கர்மேலா லெபோ அவர்கள் மீது வற்றாத பற்றும் முற்றிய பாசமும் பெரு மதிப்பும் கொண்டவர் இவர். அடியேன் சிறுவனாய் இருந்த காலத்துப் பார்த்தது போலவே இன்றும் இவர் இருப்பது எனக்கு வியப்பே! சிறுவனாய் அவர் கண்ட அடியேன் வளர்ந்த பிறகு எளியேனைத் தம் தோழனாகவே ஏற்றுக் கொண்டு அன்பு பாராட்டி வருவது அவர் தம் உயரிய பண்பைக் காட்டும். எவரிடமும் எளிமையாய்ப் பழகும் இவரை அனைவரும் அன்புடன் 'சச்சி' என்றே இன்புடன் அழைப்பர்.
புதுச்சேரி அரசினர் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்றிய பின் அங்குள்ள பிரஞ்சுக் கல்லூரியில் பல்லாண்டுகள் பேராசிரியாகப் பணியாற்றிய பின்னர் இவர் பணிநிறைவு செய்தார். இவருடைய பிள்ளைகள் பிரான்சில் வசிக்கிறார்கள். ஆகவே பரி நகருக்கு அடிக்கடி இவர் வருவார். அச்சமயம் இங்கே நடைபெறும் தமிழ் விழாக்களில் இவரைக் காணலாம். கோடையிலே இளைப்பாற்றிக்கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவாய் மேடையிலே தமிழ்த் தென்றலை இவர் வீசுவார். நல்ல தமிழில் பேசுவார். இவர் பேச்சில் தமிழ்ப் பற்று ஊடுருவி நிற்கும்.
இவர் அருமை பெருமைகளைப் பலர் பேசி உள்ளனர். காட்டாக, புதுவை மண்ணின் மைந்தரான மாண்புமிகு தாவீது அன்னுசாமி (சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதியரசர்), 'பேராசிரியர் சச்சிதானந்தன் அவர்கள் பிரஞ்சிலும் தமிழிலும் நல்ல புலமை வாய்ந்தவர். பல்லாண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்ததின் விளைவாக அவர் கருத்துகளைத் தெளிவாக எடுத்துரைக்க வல்லவராகத் திகழ்கிறார்' என இவரைப் புகழ்கிறார்.
'இவர் தளரா உழைப்பினர், தாளாளர், எந்நேரமும் இலக்கியப் படைப்புப் பற்றி எண்ணிக்கொண்டிருப்பவர். செயலிலும் செய்பவர்" என இவரைப் பாராட்டிக் கூறுவார், புதுவை நன்கறிந்த முனைவர் சுந்தர சண்முகனார்.
இவர் படைப்புகளைப் புகழும் முனைவர் க.ப. அறவாணன் புதுச்சேரிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பின் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். பல நல்ல நூல்கள்pன் ஆசிரியர். இவர், பேராசிரியர் சச்சிதானந்தத்தின் நூல்களைப் பெரிதும் பாராட்டுவார். அவர் கூறுகிறார் : 'பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்கள் பிரஞ்சு மொழியிலிருந்து மொழி பெயர்த்து வழங்கியுள்ள சிறுகதைகள், எளிய முறையில் அமைந்தவை. மொழிபெயர்ப்பு என்னும் செயற்கை முட்டுப்பாடில்லாதவை. பெரியவர்களும் இளைஞர்களும் குழந்தைகளும் படிக்கத் தகுந்தவை.'
எளியேனின் நெஞ்சு நேர்ந்த நண்பர் தத்துவப் பேராசிரியர் முனைவர் க. நாரயணன், பரந்த அறிவும் ஆழந்த சிந்தனையும் கொண்டவர். தத்துவம், உளவியல் பற்றி அருமையான நூல்களைத் தமிழில் எவர்க்கும் புரியும் வண்ணம் எழுதியவர். இவரின் பல நூல்கள் தமிழக, புதுவை அரசுகளின் பரிசுகள் பலவற்றைப் பெற்றவை. இத்தத்துவ வித்தகர், பேராசிரியர் சச்சியின் புகழை இப்படி எடுத்தோதுகிறார் : "பேரா. க. சச்சிதானந்தம் அவர்களின் நூல்கள் மொழி பெயர்ப்பு என்ற எண்ணமே எழா வகையில் இயலபான மொழி நடையில் அமைந்துள்ளன. ஆசிரியரின் மொழியாக்கம் செய்யும் திறமை பாராட்டுக்குரியது".
பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்களின் தமிழ் நடை, கீற்றாய்ப் பிளந்து தரப்பட்ட கரும்பென இனிப்பதாகவும் இஃது (எளியேனின் பேராசான்) அறிஞர் மு.வ அவர்களிடம் காணப்பட்டதாகவும் பாராட்டுவார், புதுச்சேரிப் புலவரேறு அரிமதி தென்னகன்.
என்னருமைத் தோழரும் பேராசிரியராக உடன் பணியாற்றியவருமான பேரா. அ. பசுபதி (தேவமைந்தன்), "பிரஞ்சு நாட்டுக் கருவூலம் பேரா. சச்சி அவர்களின் மொழியாக்கம் என்ற ஆற்றலால், இன்று தமிழ்க்; கருவூலமாக நம் கைகளில் தவழுகின்றது" என்று சுருக்கமாக ஆனால் பொருத்தமாகச் சொல்கிறார்.
இப்படி அறிஞர்களும் பேராசிரியர்களும் பாராட்டும் பெருமை இவர்க்குண்டு. இவர்தம் சிறுவர் இலக்கியத் தொண்டினைப் பாராட்டிப் புதுவைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் பணமுடிப்பும் 'சிறுவர் மனச் செம்மல்' என்ற பட்டமும் அளித்துப் பெருமை படுத்தியது. பிரஞ்சுத் தமிழ் ஆய்வு மணி, மொழியாக்கச் செல்வர் (பாரிசில் தரப்பட்டது)...ஆகிய பட்டங்களையும் பெற்றவர். பிரான்சின் மிக உயரிய விருதான 'செவாலியே' விருது இவருக்கு அண்மையில் வழங்கப் பட்டது.
பேரா. சச்சிதானந்தம், பெத்திசெமினேர் பள்ளியில் படித்தவர். 1951 ஆம் ஆண்டு தமிழ் பிரவே தேர்வுக்குச் சென்றவரும் தேர்வு பெற்றவரும் இவர் ஒருவர்தாம். இதனை, இ;வர் 'பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை' என்ற அருமையான ஆய்வு நூல் பக்கம் 44 -இல் பதிவு செய்துள்ளார். பிரஞ்சு தமிழ் என இரு மொழிகளையும் கசடறக் கற்ற இவர் 1952 ஆம் ஆண்டில் திரு நடராசன் என்னும் ஆசிரியருடன் சேர்ந்து, 'வடிவ கணித வழிகாட்டி' என்ற நூலைப் படைத்திருக்கிறார் (காண்க : 'பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை' பக்கம் 46). ஆகவே ஆசிரியராகப் பணி அமர்ந்த சமயத்தில் இவர் கணக்குப் பாடமே நடத்தி இருக்க வேண்டும் எனக் கொள்வதில் தவறில்லை.
இவர் படைத்த நூல்களின் பட்டியல் :1. கட்டுரைக் களஞ்சியம்2. குரங்குக்காடு3. சிவப்புப்பாறை4. பிரஞ்சு தத்துவக்கதைகள்5. சின்னஞ்சிறு பிரஞ்சுக் கதைகள்6. பிரஞ்சு நகைச்சுவை 1, 27. ஞான மகன்8. சுவையான பிரஞ்சுக் கதைகள்9. சுவையான பிரஞ்சுக் கதைகள் இருபது10. சுவையான பிரஞ்சுப் பக்கங்கள்11. நல்ல நல்ல கதைகள்12. பிரஞ்சு நாடோடிக் கதைகள் 1, 213. பிரஞ்சு நாட்டுப்புறக் கதைகள்14. மிகமிக நல்ல கதைகள்15. புகழ்பெற்ற பிரஞ்சுக கதைகள்16. பிரஞ்சு இலக்கியக் கதைகள்17. மாய ஈட்டி18. பிரஞ்சு நன்னெறிக் கதைகள்19. விக்தோர் உய்கோ20. அருமைக் கதைகள் 5021. ஏழைகள்22. ஒரு நாள் ஒரு கதை (365 கதைகள்)23. பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை24. நல்லன நானூறு25. போல், விர்ழினி 26 "பெர்ரோ" கதைகள்
இவை அன்றிப் பிறருடன் சேர்ந்து, வடிவ கணித வழிகாட்டி, ஊழவெநள நவ டுநபநனெநள னந ட'ஐனெந போன்ற நூலகளையும் இவர் படைத்தள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நூல்களில் பெரும்பாலானவை பிரஞ்சுக்கதைகளின் மொழி பெயர்ப்பே! இதனை மேலே உள்ள இவர் படைப்புகளின் பட்டியல் அறிவிக்கும். இவை யாவற்றிலும் சேர்த்து இவர் மொழி பெயர்;த்துத் தந்த நூலகளின் எண்ணிக்கை ஐந்நூறாகும். (காண்க : 'புகழ் பெற்ற பிரஞ்சுக் கதைகள்' - என்னுரை). இந்த நூலில் பதினோரு கதைகள் உள்ளன. பொருளடக்கத்தில் அக்கதைகளின் பெயர்களையும் அவற்றின் இயற்றியவர்களின் பெயர்களையும் தமிழ், பிரஞ்சு என இரு மொழிகளில் தந்திருக்கிறார். புpரஞ்சு எழுத்தாளர்களில் அதிகப் புகழ் பெற்ற கீ தெ மோபசா(ன்) (புரல னந ஆயரியளளயவெ) படைப்புகளில் இருந்து நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பிடத் தக்க இன்னொரு பிரஞ்சு எழுத்தாளர், அல்போன்சு தொதெ (யுடிhழளெந னுயுருனுநுவு). இவருடைய கதைகள் ஐந்து இதில் உள்ளன. ஏனைய இரண்டில் ஒன்று புரோஸ்பர் மெரிமே (Pசழளிநச ஆநுசுஐஆநுநு) எழுதிய "நீதி' ஆகும். மற்றதை எழுதியவர் அரிஸ்தித் ஃபாபர் (யுசளைவனைந குயுடீசுநு). 'பிரஞ்சு இலக்கியக் கதைகள்' (ஊழவெநள னர ஆழலநn யுபந) என்ற நூலில்,கதைகளின் பெயர்கள் மட்டுமே பிரஞ்சிலும் இடம் பெறுகின்றன. இவற்றைத் தவிர ஏனைய கதை நூல்களில் ஆசிரியர் நூலகளின் பெயர்கள் பிரஞ்சில் குறிப்பிடப்படவில்லை என்றே தோன்றுகிறது. (ஐயாவின்; நூல்களில் ஒரு சிலவே தற்போது அடியேன் வசம் உள்ளன. ஆகவே இது பற்றி உறுதியாகவோ அறுதியாகவோ கூற இயலவில்லை!).
இக்கதை நூல்களில் குறிப்பிடத்தக்க நூல் ஒன்று உண்டு. அதுதான் 'ஒரு நாள் ஒரு கதை'. 365 நாள்களுக்கும் நாளுக்கொரு கதை இஃதில் உண்டு. இவை அனைத்தும் பிரஞ்ச மொழியிலிருந்து பெயர்க்கப் பட்டவையே. ஆனால், பெரும்பாலானவை பிரஞ்சுக் கதைகளாக இருந்தாலும்இ ஏனையவற்றின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், ஜெர்மன், சீனா, ஜப்பான், உருசியா, வியத்நாம், இந்தோனேசியா... ஆகும்.
இதன் முன்னுரையில் ஆசிரியர்,"கதைகள் சிலவற்றில் தமிழ் நாட்டுக் கதைகளின் சாயல் தெரியும். ஆனால் அவற்றில் வேறுபாடுகள் இருக்கும். இதில் உள்ள கதைகள் பல்வேறு வகையின. நீதி வரலாறு, அறிவுரை தத்துவம், பொழுதுபோக்கு, நகைச் சுவை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டவை..." என்று கூறுவது முற்றிலும் உண்மையே! எந்தக் கதை எந்த நாட்டினுடையது என்ற குறிப்பு இல்லாமை வருந்தத் தக்கதே! அக்டோபர் 1 ஆம் (274 -ஆம்) நாள், கதைத் தலைப்பு 'தன் வினை தன்னைச் சுடும்' நகைச் சுவை மிக்கது. படிக்கச் சுவையானது. (பக்கம் 257).
ஐயா இப்படிப் பிரஞ்சு மொழிக் கதைகளை மொழிபெயர்த்து வழங்கியமைக்கு மகாகவி பாரதியும் காரண கர்த்தா ஆவார்.
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல். வேண்டும்"
எனப்பாடித் தூண்டியவர் அவர்தாமே! ஆனாலும், தம் ஆக்கங்களுக்கு மறைமுகமாக அவர் தரும் காரணங்கள் : "படிக்கத் தெரிந்த பிள்ளைகளிடம் கதை நூல்களைக் கொடுத்துப் படிக்கச் செய்ய வேண்டும். கதைகள் படிப்பதால் வாசிக்கும் பழக்கம் வரும். எடுத்த நூலைப் பிழையின்றிப் படிக்கலாம். கட்டுரைகளைப் பிழையின்றி எழுதலாம். எழுத்துப் பிழைகளும் சொற்றொடர்ப் பிழைகளும் குறையும், சொல்வளம் பெருகும். பிள்ளைகளுக்குப் படிக்கம் வழக்கம் வளர, கதைகள் வழிகாட்டும். படிக்கும் பழக்கம் அனைவருக்கும் அவசியமானது".
அதனால்தான், நீதியரசர் மாண்புமி;கு கற்பக விநாயகம் அவர்கள், "படிக்கும் பழக்கம் இல்லாதவன் நீரற்ற மேகம், பாலற்ற பசு, பழமற்ற மரம். எனவே நிறையப் படிக்க வேண்டும்' என்கிறார். இதற்காகவே பலப் பல கதை நூல்களைப் படைத்த பேராசிரியர் சச்சிதானந்தம் நம் பாராட்டுக்கும் சீராட்டுக்கும் உரியவர்.
அண்மையில் தாயகம் சென்றிருந்தேன். நண்பர் 'சச்சிக்கு' நண்பர்கள் வழியாகத் தூது விடுத்தேன், சந்திக்க ஆவல் என்று. குறிப்பிட்ட நாளன்று நண்பர்கள் கூடினோம். ஆனால் உடல்நலக் குறைவால் சச்சி கலந்துகொள்ள முடியாமல் போனது. பிரான்சுக்குப் புறப்படும் நாளுக்கு முந்திய நாள், என்னருமை நண்பர்கள் - முனைவர் தத்துவப் பேராசிரியர் க. நாராயணன், நன்னெறிப் பதிப்பக உரிமையாளரும் சிறுவர்கள் கதைகள் பதிப்புக்கு வித்திட்டவரும் தாகூர் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை முன்னாள் தலைவருமான பேரா. எ. சோதி - என்னை அகத்தியம் சந்திக்க விரும்பினர். புதுவையில் ராம் இன்டர்நேஷனல் ஓட்டலில் சந்தித்தோம். என்ன வியப்பு, உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் எளியேனைச் சந்திக்க வந்துவிட்டார் சச்சி.
இதுதான் பேராசிரியர் சச்சிதானந்தம்!
பி.கு : அவரின் சிறந்த நூலான 'பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை" பற்றிய எளியேனின் கண்ணோட்டம் விரைவில் வரும்.
- பெஞ்சமின் லெபோ

2 comments:

அனானி அக்னிக்குஞ்சு said...

இதில் எத்தனை புத்தகங்கள் நீங்கள் படித்துள்ளீர்கள்? அதில் எதாவது ஒன்றினைப் பற்றி விமர்சனம் எழுதுங்களேன். நன்றி

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Celular, I hope you enjoy. The address is http://telefone-celular-brasil.blogspot.com. A hug.