-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Monday 21 June 2010

நூல் அறிமுகம்

கவிதாயினி வே.பூங்குழலி பெருமாளின் கவிதைக் கனிகள் நூல் 22.05.2010 அன்று மாலை பாரீசு நகரில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வெளிடப்பட்;டது. இந்நூலைப் பற்றி பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதியதை அளித்துள்ளோம்.





சேன் நதிக்கரை ஓரம் வான் நிலவு வலம் வரும் நேரம்!
புதுவைக் குயிலொன்று பொன்னான பாட்டிசைக்கின்றது
கேட்டவர் மனத்தை நல்லாம் அசைக்கின்றது!
இந்தக் குயில் எந்தக் குயில்?
அருமை நண்பர் ஆறுமுகம் பெருமாளின்
பெருமைக்குரிய துணைவியார்!
கலைமாமணி இயலிசைப் புலவர்
இரா வெங்கடேசனாரின் தவப் புதல்வியார்!
இளங்கலை, முதுகலை, இளமுனைவர், ஆசிரியர் பயிற்சியெனப்
பலவகை பட்டங்களை வாரிக் குவித்தவர்! வாங்கிக் களித்தவர்!
காரைக்குடி அழகப்பாப் பலகலைக் கழகத்தின்
தொலைதூரக்கல்வி இயக்கத்தின்
பகுதி நேரப் பேராசிரியர்.
துள்ளி விளையாடும் பள்ளிப் பருவம் முதல்
பல்வேறு போட்டிகளில் பலவகைப் பரிசுகளை
அள்ளிச் சென்றவர் @ ஜெயித்துக் காட்டுவோம்
வெற்றி நிச்சயம் நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பயிற்றுநர்.
புதுவை சுiபாவ தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பை நிகழ்த்தியவர்.
பட்டி மன்றங்களோடு ஒட்டி உறவாடுபவர்.
கவியரங்கங்களில் அவை ஈர்ப்பவர்.
இனிய குரலெடுத்து இன்னிசையால் செவிக்கு விருந்தளிப்பவர்.
கருத்தரங்கா? விவாத மேடையா? பொருத்தமான நூல் திறனாய்வா?
நிழ்ச்சித் தொகுப்பா? நீண்ட தனிப் பேச்சா?
இத்தனைக்கும் ஈடு கொடுக்கும் வித்தகர் இவர் என்றால் வியப்பாக இல்லையா!
உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை!
அத்தகையவர்தாம் நம்
பூங்குழலி பெருமாள்!
புவி போற்றும் பூங்குழலி பெருமாள் இன்று தருகிறார்
'கவிதைக் கனிகளை"!
பூங்குழலி பெருமாள் கவிதைகள்
பலாப் பழக் கவிதைகள் அல்ல
வெட்டிப் பிளந்து கோது களைந்து
கொம்புத் தேன் அளைந்து உண்பதற்கு!
பூங்குழலி பெருமாள் கவிதைகள்
மாங்கனியாய் இனிப்பவை!
தேங்குழலாய்ச் சுவைப்பவை!
வெற்றுக் கவிதைகளா அவை?
இல்லை, இல்லை!
சுற்றுப்புறச்சூழல் முதல்
சுனாமி வரை பலவேறு கருத்துகளை
அள்ளித் தெளிக்கும் துள்ளிக் குதிக்கும்
குற்றாலத் தேனருவிச் சாரல்கள்.
கவிதைக் களிப்பு தரும் மதுக்குட ஊறல்கள்!
இம்மா உலகம் நமக்குத் தொடங்குவதே
அம்மாவின் வயிற்றிலேதான். அந்த
அம்மாவை முதலாக வைத்தே
தம் நூலைத் தொடங்குகிறார்.
நேரில் நின்றால்தான் அம்மா நம் நெஞ்சில் நிறைவாள்
வேரிடம் சென்றால் நம் நினைவில் அவள் மறைவாள்!
கவிதைக் கனிகள் தரும் கவிஞர்
எங்கெல்லாம் அம்மாவைக் காணுகிறார் பாருங்கள்!
'ஊனில் உயிராய் உறைபவள் அம்மா!
மணியுள் ஒலியாய் ஒலிப்பவள் அம்மா!
2
விளக்கில் சுடராய் ஒளிர்பவள் அம்மா!"
கண்ணிலிருந்து மறைந்தாலும் கருத்தில்
எண்ணத்தில் நீக்கமற நிறைபவள் அம்மாதான்!
கவிதாயினியின் பொருள் பொதிந்த சொற்கள்
புவிமீது நிலைக்கும் தாமே!
வயலாமை, கடலாமை, புழுக்காமை... எனப்
பலஆமைகளை நாமறிவோம் ஆனால்,
நமக்குள்ளே புகுந்து நம்மில் வளர்ந்து
நமக்குள்ளே வாழ்ந்துவரும் ஆமைகளை நாமறிவோமா?
அகக் கண்ணால் பாhத்தே வீட்டில் நம்மில்
புகக் கூடாத ஆமைகளைப்
பாட்டில் பட்டியல் இடுகிறார் பாருங்கள் :
கல்லாமை, முயலாமை, பொறாமை, நன்மை செய்யாமை,
அடக்கம் இல்லாமை...
இப்படிப் பட்ட ஆமைகளை
நம்மில் இல்லாமையே
நமக்குரிய நல்லாண்மை என்று
கவிதாயினி உணர்த்தும் போது மெய் சிலிர்க்கிறோம.;
புதியதோர் உலகம் செய்வோம் பக் 5, 13 :
'புதியதோர் உலகம் படைத்திடல் வேண்டும்!
அன்பால், நட்பால், பண்பால், பக்தியால்
'புதியதோர் உலகம் படைத்திடல் வேண்டும்!"
எனக் கவிதை பாடும் கவிதாயிpனி,
'புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்" என்று
பாடிய பாவேந்தனின் கொள்ளுப் பேத்தியாகவே
காட்சி தருகிறார்!
சுற்றுப் புறச் சூழலில அவருக்குள்ள அக்கறையைப்
பலபக்கங்களில் (17, 19, 23) காண்கிறோம். குறிப்பாக,
'சுற்றுப் புறச்சூழல் என்றும்
வற்றிப் போகக் கூடாது" என்ற வரிகளில்
அவர் அக்கறையும் கவலையும் நன்கு புலப்படும்.
'கல்லுக்குள் கவிதை" (பக் 45)
நல்ல பயிர் விளையும் விதை!
சத்தான கருத்தொன்றை
'சிலையில் இருக்கும் தத்துவம அறிந்தால்
நிலையில் உயரும் பாரத நாடே"என
முத்தாக அள்ளித் தருகிறார்.
படித்துப் பாருங்கள் பிடித்துப் போகும்.
இவர் தரும் புதுக் கவிதைகள்
படிக்க படிக்க இனிப்பவை!
இனிமை பயப்பவை!
தீக்குச்சிகளுக்கும் புதுமைப் பெண்களுக்கும்
பாக்குச்சிகளால் பாலம் போடுகிறார், பாருங்கள் :
'உரசியவுடனே
பொங்கி எழுகின்ற
புதுமைப் பெண்கள்" என்று
அடடா, அடடா வெகு அருமை!
வெண்மேகம் (பக் 37), வானவீதி (பக் 81), தென்னங் கீற்று பக் 85) என்று இவர் வரையும்
புதுக்கவிதைக் கோலங்கள் தமிழ் வான வீதியின் தோரணங்கள!;
3
நடசத்திரக் கூட்டங்கள் (பக் 90)
'வரதடசிணைக் கொடுமையால
வரன் தள்ளிப் போன
மண்ணுலகப் பெண்களின்
கண்ணீர் முத்துகளோ!" எனக் கண்ணீர் வடிக்கும் இவர் கவிதை வரிகளில்
சேக்சுபையரின் ழுலியட்டைக் காணலாம் :
.'..when he shall die
take him and cut him out in little stars
And he will make the face of heaven so fine
That all the world will be in love with night!" - Romeo & Juliette Act III Sc II

தொலைக் காட்சி (பக் 92)
பற்றிய இவர் பார்வை :
'வீடடு;ப பெண்களின்
ஓட்டினைப் பெற்று
ஆட்சி நடத்தும் அரசியல்வாதி".
நாட்டு நடப்பினை நல்ல அங்கதத்துடன் எடுத்துக்
காட்டிவிடும் இவர் நயமே, நயம்!
மின் விசிறி (பக் 93) வழியே சமய ஒற்றமையைக் காட்ட
முடியும் என யார்தான் ஊகிக்க முடியும்..
இவர் காட்டுகிறார், படித்துப் பாருங்கள் (பக் 93).
உப்பளவும் உதவாத உருப்படா இளைஞர்கள் எனச் சாக்கிரட்டீசால ; 'புகழப்பட்ட"
இளைஞர்கள் இவர் பார்வையில்
'சாதிகளை மிதித்துவிட்டுச்
சமத்தவத்தைப் பரப்ப வந்த
சோதிச் சுடர்களாய்" ஒளிறுகிறார்கள் பாருங்கள் பக் 95 -இல.;
மரபுப் பாடல்களிலும் உரம் போட்ட செடிகளாய்
இவர் கவிதைக் கனிகள் :
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியப் பாக்களில்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை இவர் அறிமுகப் படுத்தும் அழகே அழகு!
(பக் 101 முதல் 110 வரை).
'தாமருந்தி மகிழ்ந்த வொரு
தவமுனியின் காவியத்தை
நாமருந்திக் களித்திடவே
நயமாகத் தந்தகவி" எனக் கம்பனை நமக்குத்
தீட்டிக் காட்டும் இவர் திறமே திறம்! (பக் 65).
அறிஞர் அண்ணா, காமராசர், எம்சியார்... எனப் பலருக்கும்
பாட்டு வழங்கும் வள்ளல் ஆகிறார் கவிதாயினி பூங்குழலி.
தமிழ்ப் பற்று நலமெல்லாம் பெற்றுத் தழைத்தோங்கும் கவியரசி பூங்குழலி பெருமாள்
முத்தாய்ப்பாய்,
'வல்லரசு நாடாய் மாறப் போகும் இந்தியா அழகு" எனத் தம் நூலை நிறைவு செய்கையில்
பாரதத் தாயொடு நாமும் கவிதாயினியை மனதார வாழத்துகிறோம.;
கவிதாயினியின் கரம் பிடித்துக் கவிதைக்கு உரம் வடித்து அவரீன்ற முதல் குழந்தைக்கு
அழகான ச(அ)ட்டை வடிவமைத்து உதவிய கணவர் பெருமாள் ஆறுமுகம் பெரும்
பாராட்டுக்கு உரியவர் என்பதில் ஐயமே இல்லை!-பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

No comments: