-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Friday 24 September 2010

சொல் புதிது நடத்திய 'இலக்கிய ஞாயிறு" விழா

சொல் புதிது என்ற வட்டத்தை துவக்கி இலக்கியஞாயிறு விழாவினை ஏற்பாடு செய்தவர் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா ஆவார்.Strasbourg 19.09.2010 அன்று நடந்த இலக்கிய ஞாயிறு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மங்களவிளக்கேற்ற திருமதி பூங்குழலி பெருமாள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட விழா ஆரம்பமானது. திரு.பொன்னம்பலம் அனைவரையும் வரவேற்றார்.திரு அலன் ஆனந்தன் தலைமை தாங்கி விழாவை நடத்திக் கொடுத்தார். திரு மதிவாணன் திரு இலங்கை வேந்தன் பாண்டுரங்கன் திரு ஓஷ இராமலிங்கம் திரு பாரிசு பார்த்தசாரதி திரு அண்ணாமலை பாஸ்கர் திரு முத்துக்குமரன்... முதலியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கவிச்சித்தர் கண.கபிலனார் 'சொல் புதிது" என்ற தலைப்பில் கவியுரை வழங்கினார். ஒரியா கவிஞர் முனைவர் மனோரமா பிஸ்வாஸ் எழுதிய கவிதைத் தொகுப்பின் பிரஞ்சுமொழியாக்கம் செய்த நூல் வெளியடப்பட்டது. Strasbourg துணைமேயர் திரு தணியல் பயோ முன்னிலை வகித்தார். கவிஞர் இந்திரன், திரு குப்தா, திரு தெபல் சவியே திரு பூவாச்சி ஜோசப், திரு குரோ இவர்கள் வாழ்த்துரை வழஙகினார்கள். கவிஞர் இந்திரன இந்நூலைப் பற்றி பேசினார்.

மதிய உணவிற்கு பிறகு திரு கிருபானந்தன் தமிழிசையுடன் கூட்டம் தொடங்கியது. உரை மன்றத்தில் திரு தலிஞ்சான் முருகையன் திருமதி லூசியா லெபோ திரு பாலகிருஷ்ணன் திரு நாகரத்தினம் கிருஷ்ணா..சிறப்புரை தந்தனர். தொடர்ந்து பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமையில் பட்டி மன்றம் நடந்தது. கோவலன் தலை சிறந்தவனே என்ற அணியின் தலைவராக அடியார்க்கன்பன் திரு கோவிந்தசாமி செயராமன் அமர்ந்தார்.அவருக்கு எதிராகக் கொடி பிடித்தவர் திருமதி பூங்குழலி பெருமாள்.இவர் தலைப்பு :கோவலன் நிலை இழிந்தவனே! இந்தப்பக்கம் திருமதி லூசியா லெபோ திருமதி உஷா நடராசன் பேசினர் .
கோவலனுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியவர்கள் : திரு துய்மோன் கியோன் திரு மதிவாணன். பட்டி மன்றப் பேச்சாளர்கள் அனைவரும் சிறப்பாகவே பேசிச் சுவை சேர்த்தனர். கொண்டுபோனார் பேரா. பெஞ்சமின் லெபோ . இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர் இருவரை நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா. அறிமுகம் செய்து வைத்தார். ஒருவர் திரு இந்திரன் அவர்கள். இவர் தமிழகத்தின் தலை சிறந்த மிக முக்கியக் கலை விமர்சகர் கவிஞர் மொழிபெயர்ப்பாளர் ஓவியர். தமிழ் ஆங்கில மொழிகளில் எழுதி வருபவர். முன்னாள் வங்கி அதிகாரி. 2000 -ஆம் ஆண்டில் தமிழக அரசு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்தபோது 133 அதிகாரங்களுக்கு 133 நவீன ஓவியர்களின் படைப்புகளைத் திரட்டி மாபெரும் கண்காட்சி அமைத்தவர். பிரிட்டீஷ் கவுன்சிலினால் தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் அருங்காட்சியகங்களில் இருக்கும் இந்தியக் கலைப் பொருட்களை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டவர். தமிழகத்துக்கு வெளியேஇ வெகு தொலைவில் இப்படி ஒரு தமிழிலக்கியத் தேடல் நடைபெற்றுக்கொண்டு இருப்பதைக் கண்டு பெரு மகிழ்வு கொள்வதாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார். பின் தமிழ் அழகியல் என்பது பற்றிச் சுருக்கமாக விளக்கினார். இவர் புதுவையைச் சேர்ந்தவர். பல நாட்டவரும் தன்னை அழைத்துப் பெருமைப்படுத்தி இருந்தாலும் தமிழர் அமைப்பொன்று தன்னை அழைத்திருப்பது இதுதான் முதல் தடவை என்று நெகிழ்ந்து கூறினார் அவர். இப்பெருமைக்கு உரியவர் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா.

இன்னொரு சிறப்பு விருந்தினர் திரு ஏ. வி இளங்கோ அவர்களின் ஊர் கோபிசெட்டிப்பாளையம். பல்லாண்டுகள் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியபின் கலைத் துறையில் நுழைந்த இவர் சென்னையில் ஓவியக் கூடம் நடத்தி வருகிறார். இவர் ஓவியக் கூடம் ஒன்று மலேசியாவிலும் இயங்கி வருகிறது. உலகப் புகழ் பெற்ற இவரின் ஓவியங்கள் பல நாட்டுக் கலைக் கூடங்களில் இடம் பெற்றுள்ளன. இவர் ஓவியங்களில் நம் நாட்டுப் பழங் கலைகளுக்குச் சிறப்பிடம் உண்டு. கலைகளுக்குப் பெயர் பெற்ற பிரான்சு நாட்டில் இவர் பெரிதும் மதிக்கப்பட்டுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும். சில மாதங்களுக்கு முன்புதான் இவருடைய சிற்பம் (காவலர் நினைவுச் சின்னம்) ஒன்றைக் கலைஞர் திறந்துவைத்து இவரைப் பாராட்டினார். சிலப்பதிகாரம்இ மணிமேகலை ஆகியவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்புகளுக்கு இவர் வரைந்த ஓவியங்கள் மெருகு ஊட்டி இருக்கின்றன. பொதுவாக ஓவியம் பற்றியும் குறிப்பாகத் தம் ஓவியங்களைக் குறித்தும் இவர் பல சுவையான தகவல்களைச் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இருவருமே தமிழ் இலக்கியம் தொட்டுச் சென்றார்கள்.

இலக்கிய ஞாயிறு நிகழ்ச்சியினை திருமதி உஷா நடராசன் தொகுத்து வழங்கினார்.

No comments: