-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Monday 22 June 2009

அரசுக் கல்லூரிகளில் இலவசக் கல்வி: துணைவேந்தர் கோரிக்கை நிராகரிப்பு

புது நிதி ஆதாரங்கள் இல்லாததால், அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கும் பரிந்துரையை அரசு நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன், தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்குவது தொடர்பாக தமிழக அரசுக்குப் பரிந்துரை வழங்கியிருந்தார்.
"அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஏற்கனவே கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு 30 கோடி ரூபாய் கொடுத்தால், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கைக் கட்டணத்தை ரத்து செய்து விடலாம். 500 கோடி ரூபாய் வழங்கினால், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தேர்வுக்கட்டணத்தை ரத்து செய்து விடலாம்' என, ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை அரசு ரத்து செய்துவிட்டாலும், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் கட்டணம் செலுத்தி வருகின்றனர். மேலும், பல்கலை, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு செமஸ்டரின்போதும் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வுக்கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பரிந்துரை ஏற்கப்பட்டால், மாணவர் சமுதாயம் பெரிதும் பயனடையும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பரிந்துரையை தமிழக அரசு நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது. புதிய நிதி ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், அரசுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்தும் இப்பரிந்துரையை ஏற்க முடியாது என, அரசு தரப்பில் தெரிவித்துவிட்டதாக உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: