-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Wednesday 17 October 2007

கடிதம்

அன்பார்ந்த நண்பர் பெஞ்சமின் அவர்களுக்கு, வணக்கம்.முதலில், நான் திண்ணை ஆசிரியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகல்:
பாரிசில் பாரதி-125 விழா
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டதை அழகிய சொற்சித்திரமாக்கியுள்ளார் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ.அந்த விழாக் கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெறுவதற்கு, நம் திண்ணை.காம்-இல் இவ்வாண்டு ஏப்ரல் 19 அன்று வெளிவந்த - "ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்? - ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி" என்னும் என்கட்டுரையைஜ"நன்றி: திண்ணை.காம்" குறிப்பிட்டு, நண்பர் நாகி மூலம் அனுப்பிவிட்டு, விழாவில் பங்கேற்க இயலாதிருந்த எனக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் உயிரோட்டமுள்ள இந்தச் சித்திரமும் தெளிவான படங்களும்மகிழ்ச்சியைத் தருவன.கட்டுரையைத் தக்க தருணத்தில் வெளியிட்ட தங்களுக்கு என் பாராட்டுகள். அன்புடன்
தேவமைந்தன்
பாரதி விழா மலரும் பாவாணர் நூற்.விழா மலரும் கிடைத்தன பாவாணர் நூற்.விழாச் சிறப்பு மலர்களிலேயே பெரியதும் சிறப்பானதும் மலேசியாவில்பேராக் - பாரிட் புந்தாரில் வெளியான மலேசிய மலர்தான்.
பாரதி-125 விழா மலரில் உங்கள் கட்டுரை மட்டுமே எடுகோளை(hypothesis)முடிபு நோக்கி நகர்த்தி ஆய்ந்துரைக்கும் அறிவுத்திறன் கொண்டுள்ளதாக விளங்குகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து இணையவுலகுடன்நெடுங்காலமாகத் தொடர்புகொண்டுவரும் ஹரியின் 'மன்ற மையப் பதி'வைச் சான்று காட்டியிருப்பதும் சிறப்பு.(புதுச்சேரி.காம்-(pudhucherry.comஇல்வலையாசான் தியாகுஇ 'ஹரிமொழி' என்ற பகுதியையே தனியாக வைத்துள்ளார்..)
நம் புதுச்சேரி மண் பற்றிச் சொல்லியிருப்பதும் உண்மையே. அரவிந்தர்இங்கேயே ஆசிரமம் நிறுவியதுபோல் பாரதி இங்கேயே இருந்திருந்தால் அவர் நீடித்திருப்பார் என்றொரு நம்பிக்கையும் 'தமிழணங்கு' ஆசிரியர்வேலாயுதனார் முதலானோரிடையே நிலவியது. பாரதியைப் புதுவையிலிருந்து மீண்டும் தமிழகத்துக்கு நகர்த்திய மனிதசக்தி எது? நெடும்பாடல்கள் மூன்றைஅவர் தருமாறு செய்த புதுச்சேரி அவருக்குச் சலிப்பானதுமேன்?('பாரதியார் கவிதைகள்' - வானவில் பிரசுரத்தில் இக்கருத்தைக் கண்டேன்.)
பாரதியின் தலையசைப்பின் நோக்கத்தை நன்றாக ஆராய்ந்திருக்கிறீர்கள். மனோன்மணியம் சுந்தரனார் மொழிந்ததையும் சரியான முறையில்கொடுத்துள்ளீர்கள்.
"ஆணாதிக்கம் குறைந்துவரும் இந்தக் காலகட்டத்தில் கூட, பெண்ணுக்குஇழைக்கப்படும் அநீதிகள் குறையவில்லையே! " "..பாஞ்சாலி சபதம் பாரதப் பெண்ணின் சபதம் முடிவடையவே முடிவடையாது" ..பிறகு முடிபுரைக்கும்கடைசிப்பத்தி - அருமை. எனக்கு இப்படியொரு 'கான்செப்ட்' உதிக்கவில்லையே என்று மகிழ்ந்து உங்களைப் பாராட்டுகின்றேன்.
இக்கட்டுரையை, இறுதியில் 'நன்றி: மகாகவி பாரதியாரின் 125ஆம் ஆண்டுவிழா மலர், முத்தமிழ்ச் சங்கம், பிரான்சு' என்று குறித்துத் திண்ணைஆசிரியருக்கு நீங்கள் இணைப்பில்(attachment) அனுப்பலாமே? அவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன் தங்கள்,
தேவமைந்தன்
பின்குறிப்பு:கம்பன் விழா அழைப்பிதழிலும் பாரதிவிழா மலரின் கடைசிப் பக்கத்திலும்இடம்பெற்றுள்ள Joute Oratoire என்பது Debat litteraire என்றுதான் பிரஞ்சுமொழி மரபுப்படி இருக்கவேண்டும் என்று நா.கி. அவர்களிடம் தான் சொன்னதாக, நண்பர் -காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின்பிரெஞ்சுப் பேராசிரியர் டாக்டர் சு.ஆ.வெங்கடேச நாயக்கர் தெரிவித்தார்.துழரவந ழுசயவழசைந என்பது தமிழில் உள்ள சொற்போரை(சொல்-மற்போர் என்றார்) பிரஞ்சில் சொல்லுவதாக உள்ளதாம். தாங்கள் விழைந்தால் இதுதொடர்பாக, அவர் மின்னஞ்சல் முகவரி: vengadasn2002@yahoo.fr

--தேவமைந்தன்(அ.பசுபதி)
A.Pasupathy(Devamaindhan)

No comments: