-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Sunday, 25 April 2010

நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதையுலகம்

வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு,

கனவு மெய்ப்படவேண்டும், நந்தகுமாரா நந்த குமாரா ஆகியவற்றிர்க்குப்பிறகு மூன்றாவதாக அண்மையில் வெளிவந்துள்ள எனது சிறுகதை தொகுப்பு சன்னலொட்டி அமரும் குருவிகள், புதுமைப்பித்தன் பதிப்பகம் கடந்தமாதம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான பாவண்ணண் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையை தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

அன்புடன்
நா.கிருஷ்ணா
------------------------------------------------------------------------


நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதையுலகம்
-பாவண்ணன்

கடந்த பத்தாண்டுகளாக இலக்கிய இதழ்களில் அடிக்கடி காண நேர்கிற பெயர்களில் ஒன்று நாகரத்தினம் கிருஷ்ணா. தொடக்கத்தில், பிரெஞ்சிலக்கிய ஆளுமைகளைப்பற்றிய இவருடைய அறிமுகக்கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. பிறகு, சில படைப்புகளை நேரிடையாகவே பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். எதார்த்தவகைக் கதைகளையும் அறிவியல் புனைகதைகளையும் இணைய தளங்களிலும் இலக்கியச் சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதினார். இதற்கிடையில் நீலக்கடல், மாத்தாஹரி என்னும் நாவல்களை எழுதி முடித்தார். தன் எழுத்தாக்கங்கள் வழியாகவே தன் ஆளுமையை வெளிப்படுத்தி தமிழ்ச்சூழலில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். இவருடைய இடைவிடாத உழைப்பும் அக்கறையும் பெரிதும் மதிப்புக்குரியவை.

வாழ்வின் சிக்கல்தன்மையை முன்வைத்து உரையாடும் இவருடைய சிறுகதைகள் எக்கணத்திலும் அதை எளிமைப்படுத்திப் பார்க்காமல் சிக்கலின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் இயங்குகின்றன. இதுவே இத்தொகுதியின் சிறப்பம்சம் என்று சொல்லலாம். ஒருசில கதைகளில் அந்த மையத்தை அவர் எளிதாக வந்தடைகிறார். சிலவற்றில் முட்களும் புதர்களும் மண்டிக்கிடக்கிற வழியை விலக்கமுடியாமல் தடுமாறி, சற்றே சுற்றியலைந்து களைப்போடு வந்தடைகிறார். இருவிதமான கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. எத்தருணத்திலும், கலையம்சம் குன்றாமல் ஒரு படைப்பை முன்வைக்கவேண்டும் என்பதில் இவருக்குள்ள ஈடுபாடு பாராட்டத்தக்க ஒன்று. இந்த ஈடுபாடும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்கு அவரை அழைத்துச் செல்லும். இவருடைய சிறுகதைகள் புதுச்சேரி, பாரிஸ், இலங்கை என பல களங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளன. இவருடைய பின்னணித் தேர்வு ஒரு கதையிலும் பிசகவில்லை என்பதை சிறப்பம்சமாகச் சொல்லவேண்டும்.

"சன்னலொட்டி அமரும் குருவிகள்" இத்தொகுதியில் உள்ள முக்கியமான கதைகளில் ஒன்று. மழைத்தூறலுக்குப் பயந்த குருவிகள் இவை. சொந்தக் கூட்டை இழந்தவை. குளிரும் காற்றும் தாக்க நடுங்குபவை. தொடர்ந்து வானத்தில் பறக்கவோ, மரக்கிளையில் அமரவோ சக்தியில்லாதவை. உட்கார்ந்து ஆசுவாசமடைய அவற்றுக்கு ஈரமில்லாத ஒரு இடம் உடனடியாக தேவைப்படுகிறது. எங்கெங்கோ அலைந்தலைந்து இறுதியாக ஒரு வீட்டை அடைகின்றன. ஆனால் அவற்றுக்கு வீடு தேவையில்லை. சற்றே கொஞ்சமாக இடமிருக்கிற சன்னலோரம் மட்டுமே போதும். வீடு தனக்குரிய இடமல்ல என்பது குருவிகளுக்குத் தெரியாததல்ல. ஆபத்துக்கு வேறு வழியில்லை என்பதால் வந்துவிட்டன. அந்த ஆபத்துக்கட்டத்தில்கூட தன் எல்லையை மீறி உள்ளே செல்லவில்லை. நடுக்கத்துடன் ஓரமாக ஒதுங்கி நிற்கின்றன. ஆனால் குருவிகளைப்பற்றிய கதை அல்ல இது. கூடில்லாத குருவிகளைப்போல வாழ பொருத்தமான ஒரு இடமோ, நிலமோ இல்லாத மனிதர்களின் கதை. ஒருவன் இலங்கையைச் சேர்ந்தவன். இன்னொருவன் புதுச்சேரிக்காரன். இருவருமே சொந்த இடத்தில் தம்மைப் பொருத்திக்கொள்ள இயலாதவர்கள். தங்குமிடம் தேடி குருவியைப்போல அலைகிறவர்கள். போலிக் கடவுச்சீட்டுகள்மூலம் நாடுவிட்டு நாடு வந்தது பிழையானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவர்களுடைய பயணம் ஒதுங்குவதற்கு ஒரு இடம்தேடி. உயிரைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு வேலையையும் தேடி. இலங்கைக்காரனாக அடையாளம் சுமந்து புதுச்சேரிக்காரனும் இந்தியனாக அடையாளம் சுமந்து இலங்கைக்காரனும் பயணப்பட்டு அகப்பட்டுக்கொள்வது ஒருவித துயர்முரண். அந்தத் துயர்முரண் தண்டனைக்குக் காத்திருக்கும் தருணத்திலும் அவர்களை புன்னகை புரியவைக்கிறது. நட்புடன் உணரவைக்கிறது. இன்னும் இப்படி நிறைய எழுதிக்கொண்டே போகலாம். மொத்தத்தில், குருவியின் படிமம் கதைக்கு அழகையும் வலிமையையும் சேர்க்கிறது. எளிமையும் பயமும் கொண்ட பறவை அது. பற்றிக்கொள்ள ஒரு பிடிமானம் தேடி வந்தவர்களை அடையாளப்படுத்த இதைத்தவிர பொருத்தமான படிமம் வேறென்ன இருக்கமுடியும்?

"நாராய் நாராய் செங்கால் நாராய்" என்பது இன்னொரு அழகான சிறுகதை.
தீராத வாழ்வின் துயரத்தை உணர்த்தும் சத்திமுத்தப்புலவரின் கவிதையைப்போலவே நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறுகதையும் வாழ்வின் துயரத்தை முன்வைக்கிற ஒன்று. வானில் பறக்கும் நாரையின் பயணம் ஒரு செய்தியைச் சுமந்துகொண்டு பறக்கிறது. எங்கோ தொலைதூரத்தில் துயரத்தில் தோய்ந்திருக்கும் மனைவியிடம் தான் உயிர் பிழைத்திருப்பதையே செய்தியாகச் சொல்லியனுப்பிய புலவரின் அன்றைய துயரக்கதைதான் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. போர்நிறைந்த இலங்கைச்சூழலில் உயிருடன் இருப்பதே இன்றைய தேதியில் ஒரு பெரிய செய்தி. அதைச் சுமந்தபடி கடலுக்கு மேலே வானத்தில் அங்குமிங்கும் பறந்துகொண்டிருக்கின்றன நாரைகள். செய்தி சுமந்த நாரைகள் வானத்தில் பறந்துகொண்டிருக்க, புவியின்மீது ஒவ்வொரு கணத்திலும் உயிருக்குப் போராடும் மனிதர்களின் நடமாட்டத்தைக் காண்கிறோம். பதுங்குகுழி வாழ்க்கை, துப்பாக்கிமுனைக் கேள்விகள், எதிர்பாராத மரணங்கள் என எல்லாமே கட்டுக்கோப்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. பீதிநிறைந்த படகுப்பயணத்தை வாசிக்கும்போது நம் மனமும் பீதியில் துவளுவதை உணரமுடிகிறது.

மனத்தின் கோலத்தை நுட்பமான சித்தரிப்புகளுடன் உணர்த்தும் சிறுகதை "புலியும் பூனையும்". புலியும் பூனையும் வேறுவேறு ஆளல்ல. புலியாக இருக்கும் ஒருவரே ஒரு சமயத்தில் பூனையாகப் பதுங்கிப் பம்முகிறார். காலம் முழுக்க சீற்றம் நிறைந்த புலியாகவும் உறுமும் புலியாகவும் நகம்கொண்ட பாதத்தால் அறைகிற புலியாகவும் முரட்டுப் பிடிவாதமும் முறைக்கும் விழிகளும் கொண்ட புலியாகவும்மட்டுமே பார்த்த ஒருவரை சூழ்நிலையின் நெருக்கடிகள் பின்வாங்கிப் பதுங்கவைக்கின்றன. ரௌத்திரத்துக்கு நேர்எதிராக நடுக்கத்தை புலியின் முகத்தில் முதன்முதலாகக் காணநேர்கிற ஒருவர் எப்படி உணரக்கூடும்? உறுமலான அதட்டல்களால் கிட்டத்தட்ட ஒரு அடிமைபோல தன்னை நடத்துகிற கணவன் நடுங்கித் தடுமாறுவதை மிகஅருகில் உட்கார்ந்து அணுஅணுவாகப் பார்க்க நேர்கிற மனைவி எப்படி உணர்வாள். அதைத்தான் படிப்படியாக சித்தரித்தபடி செல்கிறது கதை. முதலில் ஒரு நம்பமுடியாமை. அச்சம். மரபின் பழக்கம் அவளை அப்படி அழுத்துகிறது. பிறகு மனஆழத்தில் சட்டென திரண்டெழுகிறது ஒருவித எதிர்ப்புணர்வு. தன் களிப்பு வெளிப்பட்டுவிடாதபடி அச்சமெனும் போர்வையைப் போர்த்தியபடி உள்ளூர கணவனுடைய நடுக்கத்தைக் கொண்டாட்டத்தோடு பார்க்கிறாள் அவள். ஆவேசத்துக்கும் நீண்ட உரையாடலுக்கும் இடம்கொடுக்கக்கூடிய தருணங்களில் எல்லாம் அவை வெளிப்பட்டுவிடாதபடி கவனமாக எழுதப்பட்டுள்ளது சிறுகதை. எந்த இடத்திலும் கலைத்தன்மைக்குப் பாதகம் நேராதபடி பார்த்துக்கொள்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

நான் படித்த அளவில் இக்கதைகள் எனக்கு வழங்கிய அனுபவத்தையே இங்கு முன்னுரையாக எழுதியிருக்கிறேன். இத்தொகுதியை முதன்முதலாக வாசிக்க நேர்கிற இன்னொரு வாசகர் இதே திசையில் செல்லவேண்டும் என்பது எவ்விதமான கட்டாயமும் இல்லை. அவருடைய சுதந்திரப் பயணத்துக்கு இக்குறிப்புகள் ஒருபோதும் தடையாக இருக்காது. ஆனால், தன் வாசிப்பின் முடிவில் இதேபோல இன்னொரு முன்னுரையை அவர் எழுதிப் பார்க்க இது தூண்டுகோலாக இருக்கும்.

நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

அன்புடன்
பாவண்ணன்

5ஆம்ஆண்டு விழா

வொரெயால் தமிழ்க் கலாச்சாரமன்றம் பிரான்சு சார்பாக 10.04.2010 அன்று பிற்பகல் 3 மணியளவில் வொரொயாலில் விழா நடைபெறவுள்ளது. சங்கத்தின் தலைவர் திருமிகு இலங்கைவேந்தன் பாண்டுரங்கன் அவர்களால் விழா ஏற்பாடு நடைபெறுகிறது. தொடர்புகளுக்கு பேசி எண் 06 10 43 22 16 – 06 61 34 32 89 – 01 30 32 96 43
E.mail association_tamoule@yahoo.fr

6ஆம்ஆண்டு கலைவிழா

திருவள்ளுவர் கலைக்கூடம் பிரான்சு சார்பாக 03.04.2010 அன்று பிற்பகல் 3 மணியளவில் மோமாங்கி என்ற ஊரில் விழா நடைபெறவுள்ளது. சங்கத்தின் தலைவர் திருமிகு அண்ணாமலை பாஸ்கரன் அவர்களால் விழா ஏற்பாடு நடைபெறுகிறது. தொடர்புகளுக்கு பேசி எண் 06 28 26 20 45 , email : annamalebhasker@yahoo.fr

Sunday, 11 April 2010

இலக்கியத் தேடல் 4 ஆம். கூட்டம் + முனைவர் திருமுருகனார் நினைவு நாள்







அன்புள்ள இலக்கிய ஆர்வலர்களே!
வணக்கம்.
இலக்கியத் தேடல் 4 ஆம். கூட்டம் +
முனைவர் இரா திருமுருகனார் முதலாண்டு நினைவு நாள்
மார்ச்சுத் திங்கள் சனிக்கிழமை 06 ஆம் நாள் மாலை 04.30 மணிக்கு நடைபெறும்.
இடம்
Maison de la culture et langue du monde
95 Boulevard d'Oise
95490 Vauréal
RER "A" terminus Cergy Le Haut
Prendre le bus "34 S" Arrêt Le Hôtel de ville (Mairie de Vauréal)
(http://www.stivo.com/voyager/recherche_horaire.php#resulthoraires)
தொடர்புகளுக்கு :
01 39 86 29 81
06 03 58 23 38

தலைப்பு .
நாடக இலக்கியம் 2 ஆம் பாகம்
உரை தருபவர்
திரு பொன்னரசு அவர்கள்

அன்புடன்
பெஞ்சமின் லெபோ

தனித்தமிழ் இயக்கம்

சிலப்பதிகார விழா

நாள்: 2040 சிலை7,(22.12.2009) செவ்வாய் மாலை 6.00 மணி

இடம்: சுப்பையா திருமண நிலையம்

தலைமை: திரு.க.தமிழமல்லன்

தலைவர், தனித்தமிழ்இயக்கம்



தமிழ்த்தாய் வாழ்த்து:

பா. பனிமலர்,அழகி

வரவேற்பு : திரு.க.இளமுருகன்

சிலப்பதிகாரம் ஓதுதல்



செயலறிக்கை:

ஆசிரியை த.தமிழ்க்கொடி

பாட்டரங்கம்

பாவலர்கள்

தமிழ்மாமணி ந.ஆதிகேசவன்

ஆறு.அரங்கண்ணல்

இரா.அருணாசலம் மு.பாலசுப்பிரமணியன்

விசயலட்சுமி

அசோகா சுப்பிரமணியன்

யுகபாரதி, ப.திருநாவுக்கரசு

சச்சிதானந்தம், கலியபெருமாள்



திருவள்ளுவர் படத்திறப்பு

முன்னாள் அமைச்சர் திரு.நா.மணிமாறன்

தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் படத்திறப்பு

திரு.தங்க.சுதர்சனம்

சிங்காரவேலர் படத்திறப்பு

முன்னாள்ஆணையர் தியாகராசன்

பாவலர் தமிழ்ஒளிபடத்திறப்பு

கலைமாமணி கல்லாடன்



சிறப்புரை

முன்னைத் துணைவேந்தர் மாண்பமை பேராசிரியர் க.ப.அறவாணர்

வாழ்த்துரை: மாண்பமை

முன்னாள் முதல்வர்

திரு.ந.அரங்கசாமி

மாண்பமை

உழவர்கரைநகராட்சித்தலைவர் திரு.செ.செயபால்



பட்டிமன்றம்

சிலப்பதிகாரத்தில்

மனங்கவர்ந்தவர்கள்

ஆடவரா? பெண்டிரா?



நடுவர் : பேராசிரியர் இராச.குழந்தைவேலனார்

ஆடவரே

பாவலர் தி.கோவிந்தராசு

பாவலர்அ.உசேன்



பெண்டிரே

முனைவர் நாகசெங்கமலம்

பேரா.விசாலாட்சி

நன்றி:த.தமிழ்ச்செல்வி

தொகுப்புரை:

பேரா.த.தமிழிசைவாணி



அனைவரும்வருக.

தனித்தமிழ்இயக்கம் தட்டாஞ்சாவடி.

புதுச்சேரி -9 தொ.9791629979

Wednesday, 31 March 2010

இலக்கியத்தேடல் 3 ஆம் கூட்டம்





இலக்கியத் தேடல் 3 ஆம் கூட்டம் - தலைப்பு பற்றிய தகவல்கள்
09.01.2010 அன்று
வொரெயால் நகரில் நடைபெறும்
இலக்கியத் தேடல் 3 ஆம் கூட்டத்தில்
திரு பொன்னரசு என்ற கனகராசா அவர்கள் ஆற்றும்
உரையின் சுருக்கம்

நாடக இலக்கியம்

முன்னுரை :

* உலக மொழிகள் தமிழ் மொழியைத் தொன்மை கொள்ளல்
* தமிழ் மொழியை 'முத்தமிழ்” என அழைக்கக் காரணம்
* சங்க இலக்கியத்தில் நாடகம் பற்றிய செய்திகள்
* சிலப்பதிகாரத்தில் 'அரங்கேற்றுக் காதை”யும் தொல்காப்பியத்தில் 'மெயப்பாடடியலும்” கூறும் கருத்துகள் - இயல், இசை இவைகளைத் தவிர நாடகத்தில் செம்மையுற்றொமா? அற்றோமா?


நாடகத் தோற்றம் :

* நாடகம் என்பது என்ன?
* அது எப்படித் தோன்றி இருக்கக் கூடும்
* நாடகத்தை முப்பரிமாணமாகக்கொள்வது சரியா? தவறா?
* நாடகம் மூவரால் இணைக்கப்பட்டது - A.A.A என்றால் என்பது என்ன?

நாடக வளர்ச்சி :

* சிலப்பதிகாரம் காட்டும் நாடக வளர்ச்சி நிலைகள்
* 'ஐந்தாம் வேதம்” எனக்கொள்ளப்படும் 'நாட்டிய சாஸ்திரம்” - அதன் பயன் அறிதல்.
* கி.பி 19 ஆம் நூற்றாண்டில்நாடகத்தின் நிலை அறிதல்.
* கூத்தாடிகள், கலைஞர்கள் - போற்றுதல்
* பார்சி நாடகத்தின் வருகையால் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் செய்த மாற்றம்.
* பார்சி நாடகத்தால் தமிழ் நாடகம் பெற்ற மாற்றங்கள்.

நாடகக் குழக்கள் :

* பார்சி நாடகக் கம்பெனிகளின் பங்கு
* தற்போது 'சபா” நாடககங்களின் பொக்கத் தன்மை
* இவர்கள் நடத்தும் (சபா நாடகக்காரர்கள்) நாடகம், நாடகம்
* நாடகம் - திரைப்படங்கள் : வேற்றுமைகள்.

நவீன நாடகங்கள் :

* நவீன நாடககங்கள் தோன்றக் காரணம் என்ன?
* 'காந்தி கிராமம்” நடத்திய முதல் நாடகப் பயிற்சிப் பட்டறை
* 'இப்டா” - NSD - பொன்றவைகளின் நாடகத்தின் பங்களிப்பு
* புதவைப் பல்கலைகக்கழகம், மதுரைப் பல்கலைக் கழகங்களின் தொண்டுகள்
* நாடக ஆசிரியர்கள் : சே. இராமானுஜம், கிரீஷ் கர்னாட், அல்காசி, அலிப் தன்வீர் போன்றோரின் பணிகள்

நாடக அரங்கம் :

* பலவிதமான நாடக அரங்குகள்
* எதையும் அரங்கமாகப் பயன்படுத்தும் முறை
* செவ்வக அரங்கின் இன்றைய பயன்பாட்டு நிலை
* மேடையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்துதல்
* உயிரற்ற பொருட்களை உயிருள்ளவைகளாகப் பயன் படுத்துதல்

முடிவுரை :

* நாடகத்தின் இன்றைய நிலை என்ன?
* நவீன நாடகத்தின் எதிரிகள் யாh?
* நாடகம் என்பது என்ன? அது எப்படி இருக்க வேண்டும்?
* மரபு வழிக் கலைகளின் வழியில் இன்றைய நவீன நாடகத்திற்கான அடித்தளமாக அமைதல்.
* மரபு வழிக் கலைகளைப் போற்றிப் பாதுகாத்தல்.

இலக்கியத்தேடல் 2 ஆம் கூட்டம்



இலக்கியத் தேடல் - இரண்டாம் கூட்டம்
இலக்கியத் தேடலின் 2 -ஆம் கூட்டம்
தெசாம்பர்த் திங்கள் 6 -ஆம் நாள்
ஞாயிற்றுக் கிழமை
காலை 10.00 மணி அளவில் நடைபெறும்.

இதனைத் தம் இல்லத்தில்
நடத்தித் தர
புதுவையின் புகழ்மிகு எழுத்தாளர்
திருமிகு நாக. இரத்தின கிருட்டிணா
அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
அவர்கள் முகவரி :


M. Naga. Ratina Krishna
10 Rue Herschel
67200 STRASBOURG
Tél : 03 88 278 77 71 / 06 19 48 34 02.

கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும்
ஆர்வலர்கள்
- ஸ்ட்ராஸபூர்க் சென்று வரும்
பயண ஏற்பாடுகளை அவரவர்களே செய்துகொள்ள வேண்டும்.
- திருமிகு நாக. இரத்தின கிருட்டிணா அவர்களோடு
தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்துகொள்க!

சிறப்புரைத் தலைப்பு : பின்நவீனத்துவம்
சிறப்புரையாளர் : திருமிகு நாக. இரத்தின கிருட்டிணா அவர்கள்.
அவருக்கு நம் அனைவரின் அன்பு கலந்த நன்றிகள்.

அன்பன்
பெஞ்சமின் லெபோ
இலக்கியத் தேடல் அமைப்பாளர்


அன்புசால் இலக்கிய ஆர்வலர்களே!
அன்பு வணக்கம்.
நம் இலக்கியத் தேடல் 2 ஆம் கூட்டம்
வரும் தெசாம்பர்த் திங்கள்
6 -ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை
காலை 10.00 மணிக்கு
ஸட்ராஸ்பூர்க் நகரில் நடைபெறுகிறது.
அங்குள்ள அன்பர்கள்
விழா இனிதே நடைபெற சிறு மன்றம்
ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு நம் நன்றிகள்.

அதன் முகவரி :
Centre Socio-Culturel
Cronenbourg
56, Rue Rieth
67200- Strasbourg

நண்பர் நாகரத்தின கிருட்டிணா
பேசவிருக்கிற உரையின் தலைப்பு :

'பின்நவீனத்துவம்'
உரையின் சுருக்கம்:

இலக்கியத்தின் காலவெளிகள் - நவீனத்துவம் -
பின் நவீனத்துவமென்றால் என்ன?
பின் நவீனத்துவத்துவமும் இலக்கியமும்
- தமிழில் பின் நவீனத்துவம்.

இலக்கியத்தில் காலவெளிகள்:
காலங்கள் தோறும் இலக்கியம்
எவ்வாறு அடையாளம் பெற்றது
அதன் சிறப்புத் தன்மைகள் - சுருக்கமாக.

நவீனத்துவம் என்றால் என்ன?
அது தரும் புரிதல் - அதன் தோற்றம்
- படைப்பிலக்கியத்தில் அதன் பங்கு -முடிவு.?

பின் நவீனத்துவம் என்றால் என்ன?
- பின் நவீனத்துவக் கர்த்தாக்கள்-
மேற்குலக இலக்கியங்களில் பின் நவீனத்துவம் -

தமிழில் பின் நவீனத்துவம் :
-சுந்தரராமசாமி -ப்ரேம்-ரமேஷ் - ஜெயமோகன் - எஸ்-ராமகிருஷ்ணன்.

காலம் கிடைப்பின்
இன்னொருவரும் உரையாற்றக் கூடும்.
தலைப்பு அங்கே அறிவிக்கப்படும்.

நல்லதொரு தேடல் அனுபவம்
கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
அன்பன்
பெஞ்சமின் லெபோ

பின் நவீனத்துவம் ஒரு பார்வை
(6-12-2009 அன்று ஸ்ட்ராஸ்ப+ர் இலக்கியதேடல் அமர்வில் நிகழ்த்திய உரை)
நாகரத்தினம் கிருஷ்ணா

ஒரு மொழியில் இலக்கணம் என்பது அம்மொழி ஓரளவு வளர்ச்சியை எட்டிய பிறகே, அம்மொழியின் பயன்பாட்டின் அடிப்படையில் (வாய்மொழி இலக்கியம் - எழுத்து - எழுத்திலக்கியம்) இலக்கணம் வரைவு உருவாகிறது. தொல்காப்பியத்தில் முன்னோர்கள் சொல்பவனவாகவும், பழைய நூல்களை உதாரணத்திற்கு எடுத்தும் எழுதப்பட்டிருப்பதைவைத்து தொல்காப்பியத்திற்கு தமிழ் முந்தையது எனத் தீர்மானிக்கிறோம்.

இன்றைய பிரெஞ்சுமொழி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து வழக்கிலிருந்ததென்று கொள்ளவேண்டும். அதுவரை இங்கே இலக்கியமென்றால் லத்தீன் மொழியின் ஆதிக்கத்தின் கீழ்வந்தது. ஒன்பதாம் நூற்றாண்டுவரை வெகுசன மொழியாகவிருந்த இன்றைய பிரெஞ்சுமொழியின் ப+ர்வீக மொழிக்கு அப்போது ரொமான் மொழி என்று பெயர். தமிழ்போல அல்லாமல் பிரெஞ்சுமொழி ஒரு வட்டாரமொழியிலிருந்து(Dialectes -Patois) பிறந்தமொழி. எனினும், இந்த நூற்றாண்டில் ஆங்கிலத்தைபோலவே பிரெஞ்சும் உலகில் அதிக எண்ணிக்கையிலான நாடுகளில் பேசப்படுகிற மொழியாக மாறி இருக்கிறது.

பின் நவீனத்துவம் எங்கிருந்து பிறந்தது ஏன் பிறந்தது எதற்காக பிறந்ததுபோன்ற கேள்விகள் அவசியமற்றது. 'தக்கன உயிர்பிழைக்கும்' என்ற டார்வின் கோட்பாடு உயிரியலுக்கு மட்டும் உரித்தானதல்ல, மொழி, கலை, இலக்கியம் பண்பாடென்ற உயிர் சார்ந்த இயங்கியலுக்கும் பொருந்தும். இன்றிருக்கும் நமது தமிழும் பல படிநிலைகடந்தே இந்நிலையை எட்டியிருக்கிறது, நாளை அல்லது எதிர்காலத்தில் வேறு மாற்றங்களை பெறலாம். காலத்திற்கொப்ப ஒரு மொழி இலக்கிய மொழியாக, அறிவியல் மொழியாக, சிந்தனை மொழியாக, அரசியல் மொழியாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது அவசியம். தமிழ் கடந்துவந்த பாதையைப் பார்க்கிறபோது இங்கும் அது சாத்தியமே என்று புலனாகிறது. .

1. பழங்கால இலக்கியம்

அ. சங்க இலக்கியம்(கி.மு 500-கி.பி.200வரை -அகம் புறம் பாட்டுகள்) ஆ நீதி இலக்கியம்(கி.பி.100-கி.பி.500வரை- திருக்குறள்), இ. பழைய காப்பியங்கள்- சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம்... )

2. இடைக்கால இலக்கியம்:

அ. பக்தி இலக்கியம் (கி.பி.600முதல் -கி.பி.900வரை), ஆ. காப்பிய இலக்கியம்(கி.பி.900-1200வரை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, கம்பர், ஒட்டக்கூத்தர், ஒவையார். உலா..பரணி உரை நூல்கள் , புராண நூல்கள்..

3. தற்கால இலக்கியம்

பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல், கட்டுரை, இருபதாம் நூற்றாண்டு சிறுகதை, நாவல், கட்டுரை புதுக்கவிதை, பெருங்கதையாடல்கள்.

மேற்கத்திய இலக்கியத்திற்கும் இவ்வாறான வளர்ச்சிப் படி நிலைகள் உள்ளன:
1.தொன்மைக்காலம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தையது ஹோமர், அரிஸ்டாட்டில், பிளேட்டோ
2. இடைக்காலம் -
3. மறுமலர்ச்சியுகம்
4. பரோக்
5. ரொமாண்டிஸம் எனும் கற்பனாவாதம்
6. நவீனத்துவம்
7. பின் நவீனத்துவம்


நவீனத்துவம் என்றால் என்ன?

இன்றையச் சூழலோடு இணங்கிப்போவதை நவீனமென்கிறோம். சங்ககால இலக்கியங்களுக்குப் பின் வந்தவர்கள் சொந்த முயற்சிகளில் ஈடுபடாதிருந்தால் இடைக்கால இலக்கியங்கள் இல்லை, இடைக்கால இலக்கியத்தை புரிந்து தாங்களும் புதிய முயற்சிகளில் இறங்கியதாலேயே தமிழில் உரைநடை இலக்கியங்கள் வளர்ந்தன, இன்றுள்ள நவீன இலக்கியங்கள் வளர்ந்தன. மரபுகளிலிருந்து விடுபடுதல் அல்லது விலகிச் செல்லுதல் என்பதை நவீனத்துவம் என்று சொல்கிறோம். பொதுவாக எல்லோருமே ஒரு கணத்தில் மரபிலிருந்து விலகி நிற்கிறோம் என்பது உண்மை. நவீனம் என்ற சொல்லை மேற்கத்திய மொழிகளில் Modern அல்லது Moderne என்ற உரிச்சொல்லால் குறிப்பிடுகிறோம்., இச்சொல்லின் வேர் இலத்தீன் மொழியிலிருக்கிறது. இலத்தீன் மொழியில் Modo என்ற சொல்லுக்கு சற்று முன்னர் -Just now- என்று பொருள். ஆக நேற்று என்ற சொல்லோடு ஒப்பிடுகிறபொழுது இன்று நவீனமாகிறது, 'இக்கணம்' என்ற சொல் ஒப்பீட்டளவில் 'சற்று முன்போடு' நவீனமாகிறது.

நவீனம் என்கிற சொல்லாடலில் இரண்டு புரிதல்கள் இருக்கின்றன: ஒன்று வாழ்க்கையை ஆய்வுச் செய்தல் மற்றொன்று வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லுதல். நவீனம் என்பது ஒரு மன நிலையை, பெருமூச்சை, மன்சாட்சியின் குத்தலைப் பகுத்துப் பார்த்தல். அன்றாட வாழ்வியல் காட்சிகளை மிகையின்றி அதன் வண்ணங்களை, பளிச்சிடும் உவமைகளை, அற்புதமான தொடர் உருவகங்களை படைப்பில் கொண்டுவருதல் .

- டார்வின் கோட்பாட்டினை கருத்திற்கொண்டு படைப்பாளிகள் இயங்கினார்கள். அதாவது ஒரு தனிமனிதனைத் தீர்மானிப்பது அவனது சுற்றமும், சூழலும், பரம்பரை குணமும் என்ற அடிப்படையில்.

- படைப்பின் மீதான சிந்தனையை உருவாக்குவது, படைப்புவேறு வாழ்க்கை வேறல்ல. வாழ்க்கையை பரிசீலிப்பது.

- வாழ்வின் கணத்திற்கும், வாழ்க்கையின் ஒரு பகுதியிலும் அக்கறை கொள்வது.

- உண்மைக்கு விசுவாசமாக நடந்துகொள்வது

- கதைநாயகன் குறைகளற்றவன் என்ற மாயையை தகர்ப்பது படைப்பு என்பது சரித்திரமல்ல எனவே தோல்விபெற்ற மனிதர்களும், கதைமாந்தர்களும் இடம் பெறலாம்.


நவீனத்துவத்துவம் என்ற பெயரில் பல முயற்சிகள் நடந்தன.

1. அழுத்தமான பதிவு என்கிற Impressionisme (1880)

வாழ்வின் தவறிப்போகும், அல்லது நொடிகளுக்கான காட்சிகளுக்கு முக்கியம் தருவது- கலைஞன் அல்லது படைப்பாளியின் கட்டற்ற புனைவாற்றல் கோட்பாட்டுக்கு எதிரானது. உயிர்த்துடிப்பான பிரகாசம் என்பதே இவர்களின் குரல். படைப்புத் துறையில் எமிலி ஜோலா, ஆர்னோ ஹோஸ் ஆகியோர் முக்கியமானவர்கள்.

2. உணர்ச்சிபெருக்கு அல்லது Expressionisme (1900)

அடிப்படை உணர்வுகளான மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம் போன்றவை உணர்ச்சிபெருக்கின் வெளிப்பாடுகளே. சிக்மண்ட் பிராய்டு, தாஸ்த்தாயெவ்ஸ்கி போன்றவர்கள் உதாரணம்.

அகவய மனசிக்கல்கள், கனவுகள் போன்றவற்றைக் கருப்பொருளாக எடுத்துக்கொண்டார்கள்.

3. க்ய+பிஸம் - Cubisme (1914)

ஓவியங்களில் கனச்சதுரங்களைக் கையாண்டதில் இது ஆரம்பித்தது - உண்மை என்பது பார்வையாளனின் கண்களில் இருப்பதா அல்லது திரைச்சீலையில் என்ன தோன்றுகிறதோ அதுவா என்ற கேள்வியை க்ய+பிஸ்டுகள் முன்வைத்தார்கள். பிக்காசோ க்ய+பியவாதிகளில் முக்கியமானவர். அவரது Les Demoiselles d'Avignon ஓர் அற்புதமான ஓவியம். எனது ஓவியத்தை கண்களால் பார்க்கக்கூடாது தலையால் பார்க்கவேண்டுமென்றவர். ஒரு சொல் பல பொருள் அதாவது -அல்லது பல பொருள்களுக்கு இடந்தரும் Ambiguity க்ய+பிஸ்டுகளால் வற்புறுத்தப்பட்டது.

4.Dadaisme (1916)

மரபார்ந்த அமைப்புகள் மீதான அவநம்பிக்கை, வழக்கிலிருந்த கலை நுணுக்கத்தின் மீதேற்பட்ட எரிச்சலென்று காரணங்களை தாதாயிஸ்டுகள் அடுக்கினார்கள். குறையற்ற படைப்பு என்பது இவர்கள் கோட்பாடு - வாழ்க்கையில் நேரும் அபத்தங்கள், இருத்தலின் நிச்சயமற்ற தனமை, எரிச்சலூட்டும் போலித்தனங்களும் ஏற்படுத்திய விரக்திக்கு தாதாயிஸ்டுகள் சொந்தக்காரர்கள் என்பது வெளிப்படை.

5. மிகை எதார்த்தம் - Surrealisme (1919)

யுனெசந டீசநவழn கூற்றுப்படி எதார்த்தத்தை பற்றிய நமது பழைய கோட்பாட்டை மறு பரிசீலனை செய்வது. ஒரு சிறைவாசி பார்வையாளனை சிறைவாசியாகக் கருதுவதுபோல, முரணான பார்வையில் சொல்லப்படுவது. தானியங்கி எழுத்து, கனவுகளை எழுத்தில் வடித்தல், மயங்கிய நிலையில் குழப்பமான வர்ணனைகள் - ஆகியவை மிகை எதார்த்தத்தின் பண்புகள்.

6. இருத்தலியல் கோட்பாடு - Existentialisme (1930)

மனிதனுக்கு நரகம் வேறெங்குமில்லை, இச் சமூகமே அல்லது பிறரே நரகம்( 1). பிறரால் மனிதன் தீர்மானிக்கப்படுபனல்ல, அவனால் அவன் வடிவமைக்கப்படவேண்டும். 'பிறர்' நரகத்திலிலிருந்து மனிதன் விடுதலை பெற்றாக வேண்டுமென்கிறது அவருடைய இருப்பியம். அதன்படி இருப்பென்பது (Existence) அதனுடைய தன்மை அல்லது பேருண்மைக்கு((essence)

முந்தையநிலை.ஆனால் பொதுபுத்தியில் அப்புரிதல் பல்வேறு கட்டுமானங்களின் அடிப்படையில் எழுந்து பன்முகப்பட்ட பார்வையொன்றினை உருவாக்கியிருந்தது.

'சுதந்திரம் நமக்குச் சபிக்கப்பட்டிருக்கிறது' என்றவர் சார்த்ரு. கடவுள் உலகை படைக்க நினைத்தபோது உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும், எத்தன்மையினராக மனிதர் இருக்கவேண்டுமென்பதையும் திட்டம் செய்திருந்தாரென இன்றளவும் நம்பப்படுகிறது. கடவுளுடைய அத்திட்டங்கள் பேருண்மைகள் அல்லது தன்மைகள் (நுளளநnஉநள). அவையே உலகம் அல்லது மானுடத்தின் தற்போதைய நிலைக்கு அதாவது தன்மைக்குக் காரணமானவையென்றும் சொல்லப்பட்டன. க இறைநெறிப்படி "பேருண்மை இருப்புக்கு முந்தியது (essence precedes existence.)இருப்பியல்வாதியான சார்த்ருவுக்கு இதில் உடன்பாடில்லை. அவர் கடவுள் மறுப்பு கொள்கையாளர், எனவே மனித இருப்புக்கு முந்தியது 'பேருண்மை' என்ற பேச்சுக்கே இடமில்லை. அவருக்கு இருப்பு முதலாவது, பேருண்மை பின்னர் வருவது. என்னவாக இருக்கப்போகிறோமென மனிதன் தீர்மானிக்கிற எதுவும், இருப்புக்குப் பிந்தியது எனச் சார்த்துரு சாதிக்கிறார். சார்த்ருவின் கூற்றுப்படி,"இருப்பு பேருண்மைக்கு முந்தியது"(existence precedes essence). பிறக்கும் போது மனிதன் சுதந்திரன், அவன் தளைகளால் கட்டுண்டவனல்லன், அவனுக்கான பேருண்மைகளை அவனே தீர்மானிக்கிறான், எனவே 'இருப்பு' முதலில், பின்னர் அவனால் தேடிக்கொள்ளபடுவதுதான் 'பேருண்மை' என்கிறார். சார்த்ருவுக்கு சுதந்திரம் என்பதே -ஒன்றுமில்லாத நிலை, இன்மை, நிர்மலமான எதிர்மை (pure negativity. நனவுநிலைய+டாக 'இன்மை'(nothingness) அறியப்படுகிறதென்றும், 'நானன்றி'(per se) என்கிற பண்பு, எவற்றையும் நிராகரிக்கும் குணம்கொண்டதென்பதால் அதனுடன் ஒப்பிடுகிறபொழுது, நனவு நிலை வெளிப்படையானது, மருதலிக்கும் பண்பற்றது. விதி என்பது அறவே இல்லை, என்பது அவரது வாதம்.

இலக்கியத்தில் பின் நவீனத்துவம்:

நவீனத்துவத்தின் அடுத்தகட்டம், நீட்சி, நவீனத்துவத்தின் மறு பிறப்பு, தொடர்ச்சி என்று பின் நவீனத்துவத்தை நவீனத்தின் பேராலேயே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

தெரிதா: நமுடைய சிந்தனை என்பது மொழியால் உருவாவது. எதையும் மொழி ரூபமாகவே சிந்திக்கிறோம். பேசுகிறேன், நீங்கள் தலைவிதியே எனக் கேட்கிறீர்கள், வீட்டில் இதைச் செய்ய சொல்லியிருந்தோமே செய்திருப்பார்களா என்பவை மொழி சார்ந்த எண்ணத்தைக் கட்டமைப்பவை. ஆனால் இம்மொழியை நூறுவீதம் நாம் சார்ந்திருக்க முடியுமா?

ஏங்க அதைக் கவனீச்சீங்களா? அல்லது முடித்தீர்களா என்ற கேள்விக்கும் பதிலுக்கு இதுதான் பொருளென்று திட்டவட்டமாக இல்லை. இப்படி ஒரு வாக்கியத்தில் தொனிக்கும் பல பொருள்களை தேடுவதை கட்டுடைத்தல் என்று தெரிதா அறிவித்தார். .

1. பேசுபவன்-கேட்பவன்@ எழுதுபவன்-வாசிப்பவன் இந்த உறவில் ஒரு மொழியின் வலிமை அதைப் பொருள்படுத்திக்கொள்வதில் தான் இருக்கிறது.

பின் நவீனத்துவம் இரண்டு புரிதல்களை சாத்தியப்படுத்துகிறது. ஒரு சாத்தியப்பாடு மையம் மற்றொன்று விளிம்பு. பின் நவீனத்துவம் என்கிறபோது ழாக் தெரிதா இக்கோட்பாட்டின் தலைமகன். அவர் கட்டுடைத்தல் என்ற கொள்கையை வகுத்தவர்

ஒரு புரிதல் மற்றொரு புரிதலை விளிப்பு நிலைக்குத் தள்ளுகிறது. நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம், செக்கும் சிவலிங்கமும், ஒன்றுதான், மரத்தை மறைத்தது மாமத யானை எல்லாமே பின் நவீனத்துவமே? வரிக்குதிரையின் மேல் வரிகளின் நிறம் என்ன? கறுப்பா, வெள்ளையா எது சரி?

தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

என்ற குறளுக்கு இரண்டு பொருள் உரைக்கின்றனர்.

தினமும் கணவனின் பாதங்களைத் தொழுது எழும் பெண் கற்புள்ளவள் அவள் கடவுளைக்கூட தொழவேண்டியவளில்லை, அவள் பெய்யென்றால் மழை பெய்யும் என்று பொருள் கொள்வது முதல் வகை. கடவுளைத் தொழாது கணவனைத் தொழும் பெண் பெய்யென பெய்யும் மழைக்கு அதாவது வேண்டிபெறும் மழைக்கு ஈடாவள் என்று பொருள் கொள்வது இரண்டாம் வகை. கணவனுக்குப் பணிவிடை செய்வதை வற்புறுத்தும் நோக்கிலே எழுதப்பட்ட ஆனாதிக்க கவிதையெனவும் இதை பொருள்கொள்ளலாம்.

2. படைப்பாளி -பாத்திரங்கள்

வால்மீகி இராமயணத்தில் தொடக்கத்தில் கதை சொல்லியாக வருவார் பின்னர் அவரே ஒரு பாத்திரமாக வருவதையும் பார்ப்போம். அதாவது லவ-குசர்களுக்கு ஆசிரியராக வில்வித்தை கற்பிக்கும் ஆசிரியராக வருவார். Roland Barthes par Roland Barthes: nous sommes a la fois les auteurs et les characters. :

இதன்மூல உண்மை புனைவாகவும் புனைவு உண்மையாகவும் இருக்கிறது என்று சொல்லாம்

3. ஒரு தீவிர எழுத்து என்பது முதலில் தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ள வேண்டும். தன்னை ச்சுற்றியுள்ள சமூகச்சூழலை நிர்ணயிக்கும் கலாச்சாரம் நிறுவும் ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கவேண்டும் என்றவர் பார்த்.

4. எழுத்து இருவிதத் தன்மைகள் கொண்டது வாசிப்பு என்பது ஒன்று எழுதுவது என்பது ஒன்று

நவீனத்துவம் (சில நேரங்களில் சில மனிதர்கள்) ஓ 2. பின் நவீனத்துவம் (மாத்தா ஹரி)

1 மரபார்ந்த உருவத்தில் அமைந்திருக்கிறது.
கதை ஆரம்பித்து வளர்ந்து முடிகிறது
வரிசைக்கிரமமான அத்தியாயங்கள் கொண்டது
ஒரு கதை ஒரு முடிவுகொண்டது
------------------------

1. எதிர் உருவத்தில் அமைந்திருக்கிறது. அதாவது வரிசைக்கிரமமாக இல்லாமல்
துண்டாடப்பட்ட அத்தியாய வரிசைகளால் ஆனது ஒரு கதை அல்ல

_________________________

2. பெண் விடுதலை மையம்
----
2. மூன்று பெண்களுக்கு நேர்ந்த சோகமான முடிவையன்றி மையமென்று எதுவுமில்லை.
_____________________________
3. கதை சொல்லலில் ஒற்றைக் குரல்

3. தன்மையிலும், படர்க்கையிலும் பல கதையாடல்கள் இருக்கின்றன

__________________________
4. நாவல் மரபார்ந்த நாவல் வடிவம்

4. கதை கூறலின் முன்பின்னாக நிகழ்வுகள் வருகின்றன
------------------------
5. கதையின் காலம் ஒற்றைத் தன்மை கொண்டது.
5. கதை நிகழ்காலத்திற்கும்- இறந்தகாலத்திலுமாக கதை தாவுகிறது.

-----------------
6. ஆசிரியனின் இருத்தல் தெரிகிறது
6. கதைசொல்லி, விவரணையாளன், கதாபாத்திரமென்ற எவரையும் பிரதானப்படுத்தாதமல் சொல்லப்படுகிறது

தொடக்கத்தில் கூறியதுபோன்று இன்றைக்கு சகல அறிவுத் துறைகளையும் இன்றைக்கு பின் நவீனத்துவத்தின் குறியீடுகள் கைப்பற்றி இருக்கின்றன. விரும்பியோ விரும்பாமலோ மனித வாழ்க்கை முரண்களால் கட்டமைப்பட்டது. அம்முரண்களை சமதளத்தில் நிறுத்தி நியாயம் கற்பிக்கும் ஓர் அசாதரண வல்லமை பின் நவீனத்துக்கு உண்டு. மரபிலிருந்து பிறப்பெடுத்ததுதான் நேற்றைய நவீனமும் இன்றைய பின்நவீனத்துவமும். ஆக இவை இரண்டும் மரபின் மாற்று வடிவங்கள், வேட்டி கட்டிய தமிழன், குழாய் சட்டையை ஏற்றுக்கொண்டதுபோல. எது அணிந்தாலென்ன உடுத்துபவன் தமிழ் அறத்தினை அகத்தில் போற்றுபவனாக இருக்கவேண்டும். இதனால் என்ன நன்மைகள்? என்ன பயன் பாடு எல்லா முயற்சிகளும் வெற்றி பெற்றனவா என்ற கேள்விகளுக்கு என்னிடத்தில் பதிலில்லை. தூந்திரபிரதேசத்தில் இருப்பவன் கத்தரிக்காய் வெண்டைக்காய்களால் என்ன பயன் என்பதுபோலத்தான் இதுபோன்ற கேள்விகளும். இன்றைக்கு நமது வாழ்க்கையை இலகுவாக்கியிருக்கிற அத்தனை பொருட்களும் முயற்சிகளின் விளைவுகள்தான் வானொலியே போதுமென்றிருந்தால் இன்றைக்குத் தொலைகாட்சியில்லை....இலக்கியத்திலும் புதிய முயற்சிகள் மேற்கொள்ள்படவேண்டும். மனிதர் விலங்கு இருவருக்கும் உணர்ச்சி செயல்பாடுகளில் ஒற்றுமை இருப்பினும் நாம் உணர்ச்சியைக்கடந்து உணர்வை எட்ட முடியும். விலங்குகளுக்கு சிந்திக்கும் திறனோ தம் நிலைபற்றிய உணர்வோ இல்லை. அவை ஒருபோதும் தங்களை மேம்படுத்திக்கொள்ள நினைப்பதில்லை. ஆனால் மனிதர்கள் சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள். சிந்தனை ஆற்றல் என்பது வேறு சிந்தனை தெளிவு என்பது வேறு ஐயமே அறிவுக்கு வழி என்றார் ரெனே தெக்கார்த். ஐயத்தின் நீங்கின் தெளிந்தாராக இருப்பதும் அவசியம். எப்பொருள் யார்யார்வாய் காண்பினும் மெய்ப்பொருள் காண முயற்சிக்கவேண்டும் - மனதின் இயக்கத்த்தினாலேயே அறிவை பெறமுடியும் அந்த நம்பிக்கையிலேயே பின் நவீனத்துவம்போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலக்கிய தேடல் நண்பர்களுக்கு தமிழில் தமிழில் புதிய சிந்தனைப்பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ள சுந்தர ராமசாமி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரேம் ரமேஷ், பிரபஞ்சன், பாவண்ணன், நாஞ்சில் நாடன் போன்றவர்களின் புனைவுகளையும்@, கவிஞர்களில் கலாப்பிரியா, விக்கிரமாதித்தன், ஞானக்கூத்தன், பிரமிள், மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா போன்றவர்களையும் முன் வைக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------
உதவிய நூல்கள்:
1. Postmodernism: A Very Short Introduction> Christopher Butler -Oxford University Press.
2. பின் நவீனத்துவம் என்றால் என்ன -எம்ஜி. ரமேஷ் புதுப்புனல் பதிப்பகம், சென்னை